பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:43am
விழிப்பதற்கே உறங்குகிறோம் ... வெற்றி பெறவே தோற்றுபோகிறோம்.. எழுவதற்காகவே வீழ்ச்சி அடைகிறோம்.. நம் ஒவ்வொரு சரிவுகளிலும் மனதை தளர விடாது ..வெற்றியை மட்டுமே வெறி கொண்டு நேசிப்போம்
பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:39am
வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..
பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:29am
எல்லை அற்ற இன்பங்கள் எனை தேடி வரும் போதெல்லாம் .. தேர்வு செய்வதில் தெளிவற்று போகிறேன் .. இதனால் தான் ...புரியாத பலர் எனை பார்த்து அறியாமல் சொல்வர் .. பாவம் நீ அதிஷ்டமற்றவன் என்று
பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:18am
நண்பா நீ வெற்றி பெறும் போது பெருமையாய் சொல்வேன் மற்றோரிடத்தில் "அவன் என் நண்பன்" என்று . ஆனால் நீ தோல்வி தழுவும் போது உன் அருகில் அமர்ந்து சொல்வேன் நான் உனது நண்பன் என்று
Submitted by mathirooban