nandhalala's படம்

தியானம்


முட்டைகளின் மேல்
அமர்ந்து அடைகாக்கும்
தாய் பறவை
.........................................................
விழி துளி அசையாது
அம்மாவின் வருகைக்கு
காத்திருக்கும் பிஞ்சு கண்கள்
..........................................................
ஆரவார கூச்சலுக்கிடையில்
கயிறுகளில் கால் பாதிக்கும்
அந்தரத்து வித்தைக்காரன்

0
Your rating: None

nandhalala's படம்

பயணம் தொடருதே...


வழியனுப்பவும்
வரவேற்கவும்
துணைபேசவும்
ஆளில்லாத
இலக்கில்லாத பயணங்கள்
காடு மலை நிலம்
குகை கோயில்கள்
பரந்து விரிந்த படைப்பில்
தனிமை தேடி
பயணிக்கும் மனது
நடந்தவை அனைத்தும்
அனுபவம் எனப்பெற
வருபவை பற்றிய
வருத்தம் பறந்ததே.
எய்தவனை தேடி
திரும்பிய அம்பாய்
எனை படைத்தவன்
நோக்கிய பயணம் தொடருதே...

5
Your rating: None Average: 5 (2 votes)

nandhalala's படம்

நான் எங்கிருக்கிறேன் ??


எங்கும் நிரம்பியிருக்கும்
காற்று என் நாசிகளின்
வழி நுழைந்து
உடலில் பயனித்து
வெளி வந்தது
இதயம் இரத்தம்
சுத்திகரித்து தன் கடமையை
ஓயாமல் செய்கிறது
இன்ன பிற பாகங்கள்
மூளையின் கட்டளையை
வெறித்தனமாக நிறைவேற்றுகிறது
எல்லாம் கவனிக்கிறேன் "நான்"
எங்கிருந்து கவனிக்கிறேன்???
என்பது தான் இன்னும்
புரியவில்லை

4
Your rating: None Average: 4 (1 vote)

nandhalala's படம்

பக்தி


மூத்த பெண்ணின் திருமணம்
மகனின் வேலை வாய்ப்பு
மனைவியின் மூட்டுவலி
மளிகை கடை பாக்கி
கோவில் தாக்கரின் கோபம்..........

பூசாரியின் எண்ணத்தில்
பல சிந்தனைகளுடன்
உதடுகள் மட்டும்
மனப்பாடமாய் மந்திரம்
சொல்லி திரும்ப
அவரிடம் ஆசிர்வாதம்
பெற்று பிரசாதம் பெற
முண்டியடிக்கும்
பக்த ஜனங்கள்

4
Your rating: None Average: 4 (1 vote)

nandhalala's படம்

பழைய கடிதம்


...........................
அம்மா பசியென்று சொல்லி
நான் கேட்டதில்லை ,
அவளுகென்று எதையும் எடுத்து
வைத்துகொண்டதாய் நினைவில்லை
அம்மா சிரித்து
பார்த்ததை விட சிவந்த
கண்களோடு பார்த்ததே அதிகம்
அவளுக்கு நான் சேலை
வாங்கி கொடுக்க
ஆசை பட்டபொழுது
எனக்கு வயதோ வசதியோ
எட்டவில்லை
இயலாதபோது தானே
ஆசைகள் அதிகம்
கடைசியில் ஒருநாள்
உறங்கசெல்லும் முன்
அம்மாவை இறுதியாய்
பார்த்தேன் ...

6
Your rating: None Average: 6 (2 votes)

Syndicate உள்ளடக்கம்