(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)
1 ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
2 ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
3 ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
4 ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
5 ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
6 ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
7 ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
8 ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
9 ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
10 ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
11 ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
12 ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
13 ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
14 ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
15 ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
16 ஒழுகிற வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக் கூடாது
17 ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
(47) | (20) | (32) | (4) | (25) | (7) | (39) | (8) | (3) | (17) | (9) | (179) | (58) | (23) | (62) | (78) | (74) | (29)