அச்சாணி என்பது பண்டை வண்டிகளில் சக்கரங்களை கழன்று விடாமல் பிணைத்துக்கொள்ளும் சக்கரக் காப்பாணி ஆகும்.
அச்சில் நிற்கும் ஆணி.

இது கழன்று விட்டால் சக்கரம் தனியே வந்துவிடும், வண்டியும் வீழ்ந்துவிடும், மூன்று சாண் கூட ஓடாது.

குடும்பம், சமூகம், நாடு, அமைப்பு இவ்வாறு எதை எடுத்துக்கொண்டாலு்ம் தலைவன் என்ற அச்சாணி அவசியம். சரியான வழிகாட்டி நடத்திச்செல்லும் அச்சாணி போன்றவன் இல்லையென்றால் அந்த அமைப்பு சரிவர இயங்க முடியாது என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னாருடைத்து
- முதுமொழி வெண்பா

8
Your rating: None Average: 8 (3 votes)