விதையில் இருந்து விடுதலை
முளை பயிர் சொன்னது..!
மேகத்தில் இருந்து விடுதலை
மழை துளி சொன்னது..!
உடலில் இருந்து விடுதலை
உயிர் சொன்னது..!
நாஞ்சில்
என்னை நானே
விலை கொடுத்து விற்று கொண்டேன்
இது தான் திருமணமோ
ம்
நானும் வாழத்தான் போகிறேன்
வாங்கியவர் வீட்டில்
என் வரதட்சனைகளுடன்
கடமையா..?
கண்ணியமா...?
கட்டுபாடா..?
சேவையா..?
பரிதாபமா..?
உதவியா..?
பெருமைக்கா..?
இல்லை... இல்லை...!
வேறு என்ன..?
மனித நேயம்..!
சாதி ஒழிப்பு தேவை என்று பேசிவிட்டு சற்றே நகர்கிறேன் ஓடி வந்து ஒரு பையன் கேட்டான் அண்ணே! நீங்க என்ன சாதி என்று
உங்களுக்குத் தெரியாமல் இல்லை கொலை செய்தவன் சிங்களவன் துணை போனவன் சிங் கிளவன்
அகிம்சையில் பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் ஏந்தி பாதுகாக்கின்றனர் இரவும் பகலும் எல்லையில்
கற்பனைத் திறன் மனதோடு நிறைந்து சாகும் வரை செயல் பட்டால் மனம் ஒரு குழந்தைதான் சாகும்வரை
பற்றியெரிந்தது தனிமையின் தவிப்பு வெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம் கனத்த மௌனத்துடன் நிலைநிறுத்திப் போகிற நினைவுகள் பூர்த்திசெய்கிற புலம்பல்களும் சுற்றத்தில் மனிதரும் இல்லை.. உறக்கம் தொலைத்த விழிகள் வெகு தந்திரமாகத் திணிக்கிறது எதையோ நினைத்து அதன் வலிகளில் வாழ்வின் வழியை சுருக்கி பிளவுபட்ட மர கீறலை போல் ஆனாலும் எங்கேனும் தோன்றலாம் வன்முறையிலும் வெளிச்சமாகும் ஒரு இரவு
ரமேஷ் அன்றைய பரீட்சைகள் முடிந்து பள்ளியை விட்டு வந்ததும்,”அம்மா நாளையிலிருந்து சரியான போர்மா, என் ஃப்ரெண்ட் வினோத் பத்தாம் வகுப்புக்கு டியூஷன் சேர்ந்திருக்கான், நான் என்ன செய்யறது” என அம்மா மேகலாவிடம் கேட்டான்.
“ஏன் கண்ணு, நீதான் எல்லாத்திலேயும் மொத ரேங்க் வர்றீயே, எதுக்குப்பா டியூஷன், பக்கத்து வீட்டு மோகனா அக்கா அவளோட பத்தாப்பு புஸ்தகத்த எல்லாம் தரேன்னு சொல்லுச்சு, நீ அத படிச்சுப்பாரு, புரியாதத ஸ்கூல்ல தொறந்ததும் கேட்டுக்கலாம்” என்றாள்.
“ம்ம் சரிம்மா” என்ற சொல்லி விட்டு அம்மாவை ஒரு சுற்று சுற்றிவிட்டு ஓடினான் தன் கணவனை போல சுவர்களில் விளம்பர படம் வரையப்போய் ஐந்துக்கும் பத்துக்கும் கஷ்டப்படாமல் எப்படியாவது தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என தீராத ஆசை அவளுக்கு.
தன் மகனையே பார்த்துக்கொண்டிருந்த மேகலாவின் கவனம் தன் கணவன் மாரிமுத்துவின் குரலில் கலைந்தது. “என்ன இப்பம்தான் உன் மகனை மொத தடவையா பார்க்கற மாதிரி பார்த்துட்டிருக்க, சாப்பாடு வை” என்றவாறே வந்து உட்கார்ந்தான்!
“ஸ்கூல் முடிஞ்சிடுச்சு இல்ல இந்த பயலுக்கு, நாளையிலேர்ந்து இவனையும் என்னோட கூட்டிட்டு போலாம்னு இருக்கேன், இன்னொருத்தன வச்சு தொழில் கத்துக்கொடுத்து வேலை வாங்கறத விட இந்த பயல இப்பவே சேர்த்துகிட்டா தன்னால தொழில கத்துப்பான்” என்றான் மேகலாவிடம் மாரிமுத்து.
“ஏன்யா? அவன் பத்தாப்பு முடிச்சிடட்டுமே... பின்னாடி … “என இழுத்தாள் மேகலா
“நீ வேற புரியாம பேசற, அவன் இப்பவே நல்லா படிக்கறான், இன்னும் பத்தாப்புல நல்ல மார்க் எடுத்தா, நிறைய செலவு பண்ணி மேக்கொண்டு படிக்கவைக்கனும், இவனுக்கு அடுத்த ரெண்டு புள்ளைகள எப்படி காப்பாத்தறதாம், நானெல்லாம் அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கலே, எல்லாம் போதும் அவன் படிச்சது, நாளைக்கு கூட்டிட்டு போகத்தான் போறேன்”. என முடித்தான்.
“நல்லா படிக்க பயல இப்படி கெடுக்கறீங்க, அவனாவது ஒரு நல்ல படிப்பை படிச்சி வேலைக்கு போவணும்னு இருந்தேன், எப்படியோ போங்க “என கண்ணைக் கசக்கிக்கொண்டு உள்ளே சென்றாள் மேகலா
அன்று காலையில அப்பாவின் சைக்கிளை துடைத்து கொண்டிருந்த ரமேஷை மாரிமுத்து” தம்பி என் கூட வர்றியா ஒத்தாசைக்கு “என கேட்டான் உடனே ரமேஷும் “ சரிப்பா , வர்றேன், எனக்கும் போர் அடிக்குது, இந்த ஒரு மாசம் உங்க கூட தான், ஸ்கூல் திறக்கற வரைக்கும்” என்றவனை பார்க்க முடியாமல் உள்ளே போனாள் மேகலா.
இருவரும் அலுவலகத்தில் நுழைந்ததும், மாரிமுத்துவின் முதலாளி “ஏன் மாரிமுத்து, இது உன் மகனா, சின்ன புள்ளையா இருக்கானே, எப்பிடி இவன வைச்சி வேலை செய்வ, அரசாங்க ஆர்டர் வேற , இத நல்லா செஞ்சாதான் அடுத்த எல்லா ஆர்டரும் நமக்கு வரும்” , என்றார்.
“இல்லய்யா, நானும் இவனை விட சின்ன புள்ளையா இருக்கப்பவே இந்த தொழிலுக்கு வந்தவன், இப்ப கத்து கொடுத்தா தான் பின்னாடி நல்லா வர முடியும், வீட்டில இவனுக்கு அப்புறம் ரெண்டு புள்ளைங்கள காப்பாத்தனும் இல்லீங்கய்யா, படிச்சது வரை போதும்னு தான் இங்க கூட்டியாந்துட்டேன், கண்டிப்பா நல்லா செஞ்சிடறோம்” என்ற சொல்லி முடித்தான்.
ரமேஷிற்கு இப்பொழுது தான் தன் நிலைமை மெதுவாகப் புரிந்தது. அழுகை கண்களை முட்டி கொண்டு வந்தாலும், தன் தம்பி , தங்கையின் நிலை பார்த்து தன் அப்பாவுடன் பெயிண்ட்களை எடுத்துக்கொண்டு நடந்தான்.
விளம்பர பேனரில் எழுத வேண்டிய வாசகம் என ரமேஷின் கையில் ஒரு பேப்பரைக் கொடுத்தார் முதலாளி.
வார்த்தைகளைப் பார்த்த ரமேஷிற்கு அழவேண்டும் போலிருந்த்து அப்பாவிடம் பேப்பரைக் கொடுத்து விட்டு மெல்ல சைக்கிளை நோக்கி நடந்தான். ரமேஷின் பார்வையினை உற்று நோக்கிய மாரிமுத்து தன் கையில் இருந்த பேப்பரில் உள்ள வாசகம் என்னவென்று பார்த்தான்.
ஏதோ குற்றம் செய்தவனைப் போல ரமேஷைப் பார்த்தான். ஏதும் செய்ய முடியாத ரமேஷும் சுவற்றில் பென்சிலால் எழுத தொடங்கினான்.
“பள்ளிக்குச் செல்லும் வயதில் குழந்தைகளைப் பணிக்கு அனுப்பாதே”,