Skip to main content

புதிய பதிவுகள்

DHANALAKSHMIKANNAN's படம்

எண்ணப் பிழையும் எழுத்துப் பிழையும்
கண்ணின் பிழையும் கருத்துப் பிழையும்
பண்ணின் பிழையும் பொருள் பிழையும்
பண்ணும் பிழையெல்லாம் பொறுக்கவே!

pandima's படம்

உன் நினைவுகளே வேண்டாமென்று  

கிழித்தெறிந்தேன் குப்பைத்தொட்டியில் 

அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு 

நடுவில் வந்தமர்ந்து சிரிக்கிறாய் 

முட்களுக்குள் ருசிக்கின்ற 
 
பலா போல ரணங்களுக்குள்ளும் 

வருடும் இதம் தருகிறாய் 

தமிழில் இல்லாத வார்த்தைக்கு

பொருள் தேடுகிறாய் 

உயிர் இல்லாத சிலைக்கு 

உணர்வுகளை பரிச்சிக்கிறாய் 

kavithayini sathya's படம்

எல்லா பேருந்து பயணத்திலும் 
எனக்கென்ன என்று 
என் தோள் சாய்ந்து விட்டு 
நீ சென்று விடுகிறாய்.. 

நீ போன பின்னும் 
அந்த சுமை கேட்கும் 
என் தோள்களுக்கு 
நான் என்ன சொல்வேன்.. 

உன்னை உரசிய ஸ்பரிசம் தேடி 
என் உறக்கத்தை கலைக்கும் 
உள் உணர்வுகளை எப்படி அள்ளி முடிப்பேன்.. 

எல்லாம் என்னில் இருந்த போது 
காதல் மட்டும் தேடினேன்.. 

காதல் கிடைத்தபின் 
தொலைக்க முடியாததை கூட 
தேடித் தவிக்கிறேன்....

kavithayini sathya's படம்

நிலவைத் தொடும் 
எண்ணம் வருகிற போதெல்லாம் 
உன் நினைவை தொட்டு 
விண்ணில் பறக்கிறேன்.. 

என் வாழ்க்கை ஓடம் 
தரை தட்டும் நேரங்களில் 
உன் வார்த்தை துடுப்புகளில் 
என்னை ஏந்திக் கொள்கிறேன்... 

ஆசை அலை என்னில் 
முட்டும் போது 
உன் விழி தீண்டலில் 
என் விரதம் முடிக்கிறேன்.. 

வார்த்தை ஜாலங்களில் 
யாரேனும் எனை வசை பாடும் 
நேரங்களில் நீ பரிசளித்த 
"பொறுமை" சிறகில் பயணம் மேற்கொள்கிறேன்.. 

காதல் ஒன்று தான் 
உன்னில் கொடுத்தேன்... 
வாழ்வுக்கான அத்தனையும் 

kavithayini sathya's படம்

என் வாழ்க்கை தேடலில் 
தொலைந்து போன கவிதை ஒன்று..! 

என்னை நோகடித்து சென்ற 
மருந்து உந்தன் அன்பு..! 

காலம் முழுதும் வெந்து வாட 
எனக்குள் கொடுத்து விட்டு சென்றாய் 
உந்தன் நினைவின் நெருப்பு..! 

காலம் உன்னை மாற்றி இருக்கலாம் 
காதல் உன்னை மறந்திருக்கலாம்..! 

நீ கொடுத்த காயங்களால் 
உந்தன் பாவ பதிவேட்டில் 
இன்னும் பற்று வைத்து கொண்டிருக்கிறாய்.

. என்பதை மறந்து விடாதே..!

kavithayini sathya's படம்
 

நான் கொண்ட 
நேசம் சொல்ல முயன்றேன் 
வார்த்தை இல்லா தேசம் 
என்னை வாங்கி கொண்டது.. 

காதல் எனும் என் ஒற்றை உணர்வு 
அத்தனை உறவுகளாய் 
உன்னை தான் பிரிதிபலிக்கிறது.. 

எனை வென்ற 
உன் நேசம் கூட அறியாது 
எந்தன் உயிர் எனும் உள்ளத்திற்கு 
நீ தான் உருவம் என்று .. 

வார்த்தைகளின் மொழிகளை விடவும் வன்மையானது... 
காதலை சொல்லாத என் மௌனம்.. 

எனை விட்டு மறைந்திருக்கும் 
உன் நிழலாலனது மறக்காமல் 
என் ஜீவன் பறிக்க... 

மறையாத உன் நியாபகங்கள் 
எப்போதும் நெஞ்சோரத்தில் துடிக்க. 

rajamuhunthan's படம்
 
 

முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம்  பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது


கவிஞர் கே இனியவன்'s படம்

நான் செய்த குற்றம்
உன்னை கண்டது
காதலித்தது

என்னிடம்
ஒரு உறவும் இல்லை
உன் இதயம் மட்டும்
இருக்கிறது

நீ திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன்

கஸல்‍‍ 03

கவிஞர் கே இனியவன்'s படம்

என் காதலுக்கு
நான் தான் தீவிரவாதி

சந்திக்க துடிக்கும்
காதலருக்கு
கனவுதான் பொது இடம்

நான் எழுதும் கவிதையின்
நீ வெறுத்தாலும் வாசி
வரிகள் -நீ

கஸல் - 02

Pages