"SIRIKKA THEARINDHAVANUKKU
AZHUGAI KUDA SUGAMDHAN"(( ((
மணிக்கூட்டில் உள்ள நிமிடக்கம்பி நான் -உன்னை சுற்றி வருவதுதான் என் வேலை நேரம் போவது பற்றி கவலைப்படுவதில்லை .
கூலியாளுக்கு மூடைபோல் என் இதய சுமை நீ
உனக்காக இதயக்கோயில் கட்ட நினைத்தேன் -நினைவுதான் போதாது
கஸல்
என் தலையணையில் எப்படி உன் கண்ணீர் துளி அங்கே நானிருக்கிறேனா..? எனக்கு இரவொன்று இல்லை ...
நான் உன் காதல் எனும் தீபத்தில் நெய் குறைந்து கொண்டே வருகிறேன்
உன்னை கண்ணுக்குள் வைத்திருக்கிறேன் தூக்கம் தொலைந்தது பலநாள்..!!!
உனக்கு முகவரி கொடுத்த
உன் பெற்றோர்கள்
இன்று விலாசம் இல்லாமல்
இருக்கிறார்கள்
வீதியில் ..?
த _ மி _ ழ் ர
கஸல் ; 46
உன்னைப்பற்றி ... கவிதை எழுதுவதென்றால் ... கண்ணீர் டப்பாக்களும் .. வலியென்ற பேனாவும் தேவை
என்னை உன்னிடத்தில் எடுத்துவிட்டு என்ன செய்வது என்று திண்டாடிக்கொண்டு இருக்கிறாய்
கண்ணீரிலும் .. மென்னீர் உண்டு உன் சிரிப்பில்
நீ என்ன .. கேள்விஎன்றாலும் கேள் நான் பதில் தருவேன் காதலில் மட்டும் கேட்டு விடாதே
காதல் பள்ளிப்பருவத்தில் வரக்கூடாது அது பள்ளிப்பாடம் இல்லை
தினமும் உன் நினைவு படிக்கும் பாடத்தையே குழப்புகிறது
கஸல் ; 48
தப்பாது முப்பது வைகாசியில் சிவதவசி! அப்போது ஏற்பது காசிசிவம் சிவதவசி ! முப்போதும் நிற்பது வாசிசிவம் சிவதவசி! தப்பாது ஏற்கும் சிவதவசியே!
அறுபது அகவை பெறுவது சிவதவசி! உறுபதர் உடலும் அறுப்பது சிவதவசி! நறுமலர் உயிரும் ஏற்பது சிவதவசி! குறுகாலம் மூன்றே சிவதவசியே!
உன்னோடு பேரூந்தில் பயணம் செய்கிறேன் பயணம் நீண்டு செல்ல வேண்டும் இடம் தெரியாமல்
நான் பூவின் மென்மையில் இருக்கிறேன் நீயோ -கள்ளி முள்
தொட்டுப்பார் என் உடலை நெருப்பாய் கொதிக்கிறது உன் நினைவுகள்
நீ சூரிய உதயத்தின் பின்- இருட்டு நான் சந்திர உதயத்தின் பின்- பகல் ஏக்கத்தோடு வாழுது நம் காதல்
நீரில் தீப்பந்தம் எரிகிறது நிலத்தில் மீன் வாழுகிறது -நம் காதல் நிலை
இன்றோ நாளையோ உன்னிடமிருந்து காதல் மழை பொழியும் காத்திருக்கும் தோகை மயில் நான்
கஸல் ; 51