Skip to main content

தமிழ் நண்பர்கள் பகிர்வுகள்

கடைசி சில பகிர்தல்கள் மட்டுமே இங்கே காட்டப்படுகிறது. அனைத்தும் காண
persiba's படம்

சித்திரை வெயில் சிரமப்படுத்துகையில்
சாரலாய் மனம் குளிரவைத்தாய் நீ
உன்னுள் கரைகையில் வெயில்மட்டுமல்ல
துன்பமும் தூள்தூளாய் போய்விடுகிறது!

AROUNA SELVAME's படம்


    
 நான், நான்காக மடித்துக் கொடுத்தக் கடிதத்தை வாங்கியவன், என்னைப் பார்த்துக், “கண்மணி... அன்போட காதலன் நான்... நான் எழுதிய கடிதம்ன்னு... அப்படின்னு பழைய டைலாக்கையே போடலியே...“ என்றான்.


   நான் முறைத்ததும்... “சரி சரி முறைக்காதே...“ என்று சொல்லிபடி கடிதத்தைப் பிரித்தான். பிரித்தவன் படிக்காமல் “ஐயையோ.... இதுவா காதல் கடிதம்...? கால் பக்கத்துக்குக் கூட எழுதலை. இதை போய் காதல் கடிதம்ன்னு சொன்னா யாராவது ஏத்துக்குவாங்களா...? போச்சி. போச்சி... எல்லாம் போச்சி... மத்தவங்க எல்லாம் காதல் கடிதத்தைப் பக்கம் பக்கமா எழுதி தள்ளுறாங்க. வரிக்கு வரி வர்ணனை வேற... நீ என்னன்னா... இவ்வளோண்டு தான் எழுதி இருக்கிற. நான் இதைப் போய் கொடுத்தால் நிச்சயமா செலெக்ட் ஆக மாட்டேன்னு தெரிஞ்சிடுச்சி“ அழுவாத குறையாக சொன்னான்.


   எனக்குக் கோபமாக வந்தது. இவனுக்குக் காதல் வந்தது என்றால் இவனே காதல் கடிதம் எழுதனும். அதை விட்டுவிட்டு என்னிடம் வந்து கேட்டதே தப்பு. சரி போனால் போகிறது என்று எழுதிக் கொடுத்தால் அதைப் படிக்காமலேயே குறை சொல்பவனை என்ன செய்வது?


   நான் பேசாமல் அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து அவனே கேட்டான். “இதை எழுதறதுக்குத் தான் மூனு நாள் கேட்டியா...? நீ கேட்டதைப் பார்த்தா பக்கம் பக்கமா எழுதி குவிச்சி இருப்பேன்னு நினைச்சேன்.“ என்றான் ஒருவித ஏளனமாக.


    நான் சட்டென்று அவன் கையில் இருந்த கடிதத்தைப் பறித்துக்கொண்டேன். அதை இழந்ததால் அவன் எதுவும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.


   நான் சொன்னேன். “காதல் கடிம்ன்னா... பக்கம் பக்கமா எழுதனும், நிறைய வர்ணிக்கனும் என்றெல்லாம் இல்லை. மனத்தில் பட்டதை நமக்குப் பிடித்தவரின் மனத்தில் படுமாறு எழுதினாலே போதும். உண்மையான அன்பிருந்தால் எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காகிதத்தில் “நான் உன்னை விரும்புகிறேன்“ என்று எழுதிக் கொடுத்தாலே போதும். அது தான் உண்மையான காதலருக்கு மிகப்பெரிய காதல் கடிதம்“ என்றேன்.


   “அதெல்லாம் சரிதான். ஆனால் நம்முடையக் காதலைக் கொஞ்சமாவது எடுத்து விளக்கிச் சொன்னால் தானே நாம் எவ்வளவு காதலிக்கிறோம் என்று தெரியும்“ என்றான் முணங்கலாக.


   “நானும் அதைத் தான் எழுதி இருக்கிறேன். முதலில் படிச்சிப்பாரு. கடிதத்தில் எவ்வளவு வரிகள் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை. அதில் உள்ள சொர்ப்ப வரிகளில் உள்ள வார்த்தைகளின் வீரியம் தான் முக்கியம்.“ என்றேன் சற்று கோபமாக.


   அவன் கடிதத்தை வாங்கி பிரித்துப் படித்தான். படித்தவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான். சற்று நேரம் பேசாமலேயே இருந்தான். நானும் பேசாமலேயே இருந்தேன். திரும்பவும் படித்தான். திரும்பவும் என்னைப் பார்த்தான். “சும்மா சொல்லக் கூடாது... அருமை. என் மனசைத் தொட்டுடுச்சிப்பா...“ என்றான் நெகிழ்வாக.


   நான் கொஞ்சம் பெருமிதமாக நெளிந்தேன்.


   “ஆமாம்... உனக்கு எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது....? யாராவது உனக்கு எழுதிக் கொடுத்தாங்களா...?“ சந்தேகத்துடன் கேட்டான்.


   “இது தானே வேணாங்கிறது. ஏதோ சின்ன வயசுலேர்ந்து ஃபிரெண்டு. முதல் முறையா காதலிக்கப் போறதால கேட்டியேன்னு எழுதி கொடுத்தா.... நீ கேக்கமாட்டே... சரி சரி. இப்பவாவது சொல்லு. யார் கிட்ட கொடுக்கப் போறே?“ ஆவலாகக் கேட்டேன்.


   “நம்ம திடங்கொண்டு போராடு சீனு கிட்ட தான்“ என்றான் இலேசான புன்முறுவலுடன்.


   “என்னா...து சீனு கிட்டையா...?“ கண்கள் விரிய கேட்டேன்.


   “ஆமாம்... சீனு கிட்டே தான்“ என்றான் அவன் சிரித்தபடி.


   “டேய்... சீனு ஆம்பளைடா....“ என்றேன் அதிர்ச்சி மாறாமல்.


   “ஆமாம். ஆம்பளைதான். அதுக்கென்ன இப்போ.“ அவன் அலட்சியமாகச் சொல்ல நான் அவனைச் சந்தேகமாகப் பார்த்தபடி “டேய்.... அவனாடா நீ...“ என்றேன்.


    “ஏய்....“ என்றான் குரலை உயர்த்தி. சற்று நேரத்தில் புரிந்துகொண்டு... “சீச்சீ.... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நம்ம திடங்கொண்டு போராடு சீனு, அவரோட வலையில “எழுத மறந்த காதல் கடிதம்“ என்ற தலைப்புல ஒரு போட்டி வைக்கிறார். அந்த போட்டியில கலந்துக்கத்தான் உங்கிட்ட காதல் கடிதம் கேட்டேன்.“ என்று விளக்கினான். எனக்குக் கொஞ்சம் மூச்சு சீரானது.


   “டேய்... போட்டிக்கா கேட்டே... ஒழுங்கா சொல்லி இருந்தால்... நல்லா வர்ணிச்சி பெரிசா எழுதி கொடுத்திருப்பேன். பேசாம... அந்த கடிதத்தைக் கொடுடா. வேற எழுதித் தர்றேன்.“ கையை நீட்டினேன்.


   “இல்லப்பா. இந்த கடிதமே போதும். இந்த கடிதம் பரிசு வாங்கினாலும், வாங்காவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. என் மனசுக்குத் திருப்தியா இருக்கு. அது போதும் எனக்கு. நன்றிப்பா...“ சொல்லியபடி கடிதத்தைத் திரும்பவும் பிரித்துப் படித்துக்கொண்டே சென்றான்.



அருணா செல்வம்.


19.06.2013
  
dindiguldhanabalan's படம்
/// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///
.hoverimg4{border:0;padding:0;-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;border-radius:50%;box-shadow:0 0 15px #000;border:0;padding:10}.hoverimg4:hover{-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;box-shadow:0;cursor:pointer;border-radius:0}

அண்ணே... சாப்பிட்டியா...? உங்கள் பதிவை (அருமையாச் சொன்னீங்க...!) படிச்சேன்... என்ன தான் நீங்க எழுதினாலும் மேடைப் பேச்சு என்றால், கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு...

மேலும் படிக்க.....

Rajeswarijaghamani's படம்
 ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது.

ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதருக்குத்  மிகச்சிறப்பாக நடைபெறும்திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றப்படுகிறது...

ஜேஷ்டாபிஷேகத்திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை

sukumaran's படம்

பரிசுத்தமான மனிதர் கக்கன்.
 பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட வர்.
கக்கன் ஜூன் 18, 1908 ல்,  மதராஸ் ராசதானியாக தமிழகம் இருந்தபொழுது  மதுரை மாவட்ட, மேலூர் தாலுகாவிலுள்ள  தும்பைபட்டி  கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக  திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.
 
சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது.

காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

நாட்டு விடுதலைப் போரிலும் கக்கன் தீவிரமாக ஈடுபட்டார்.  வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற கக்கன், அலிப்பூர் சிறையில்  அடைக்கப்பட்டார். 1946 ல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று  1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும்  1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.
காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.

1957 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), ஹரிஜன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப். 13, 1957 ல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப். 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 
அக். 3, 1963. அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 ல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. 
தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக  ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மாகாணத்தில் துவக்கப்பட்டன. 
இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999  ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். 
1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப் பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார்.

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

அங்கே உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.

மேலும் மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.

தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

இன்று அந்த இடம் 50 லட்சத்துக்கு மேல் பெறும். 

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்த கக்கன், 1981,  டிச. 23 ல்  மறைந்தார். 

 கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran