Skip to main content

தமிழ் நண்பர்கள் பகிர்வுகள்

கடைசி சில பகிர்தல்கள் மட்டுமே இங்கே காட்டப்படுகிறது. அனைத்தும் காண
palanivel's படம்

போர்ட்டபிள் சாப்ட்வேர் என்றால் என்ன? 

போர்ட்டபிள் சாப்ட்வேர் என்பது கணனியில் அந்த மென்பொருளை நிறுவாமல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மென்பொருளாகும். அதாவது சாதாரணமாக நமக்குத்தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பிறகு அதில் .exe கோப்பை இயக்கிய பிறகே அந்த மென்பொருள் நம்முடைய கணனியில் நிறுவப்பட்டு, பிறகுதான் அதை நாம் இயக்கிப் பயன்படுத்த முடியும்.  
அவ்வாறில்லாமல் கணினியில் நிறுவாமல் ப்ளாஷ் டிரைவ் (Flash Drive)  மூலம் நேரடியாக பயன்படுத்தும் மென்பொருள் போர்ட்டபிள் சாப்ட்வேர் ( Portable software)எனப்படும். 
portable sofware collection software

மேலும்...

TNMURALIDHARAN's படம்
   நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்க்கு காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக்  கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில்
sukumaran's படம்
இப்போது மே மாதத்தின் நடுவில் இருக்கிறோம் .

சென்ற ஆண்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம்.
மே -2012 நிகழ்வுகள் சில .
-------------------------------------

உலகம்-
------------

மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.

மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பில்  விடுதலை செய்யப்பட்டார்.

மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை.

இந்தியா-

--------------
மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது.

மே 4: மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் விளம்பர தூதராக, "தேசிய விருது' பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமனம்.

மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாட்டில், ஜெ. உட்பட 10 முதல்வர்கள் எதிர்ப்பால் ஒருமித்த கருத்து இல்லை.

மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வர் மம்தாவை சந்தித்தார்.

மே 8: "ஹஜ்' பயணிகளுக்கான மானியங்களை குறைக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவு.

மே 9: பதவி உயர்வு, போயிங் 787 டிரீம்லைனர் விமான பயிற்சி திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம். 58 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது.

மே 13: சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட "உலகின் சக்தி வாய்ந்த அன்னை யர்கள்' பட்டியலில் காங், தலைவர் சோனியா 6வது இடத்தை பெற்றார்.

மே 14: உலகின் மிகப்பெரிய இந்து கோவில், பீகாரில் அமைய உள்ளது. இது 50 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

மே 21:  கங்கையை தூய்மைப்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
மே 22: பத்ரிநாத்திலிருந்து, ரிஷிகேஷ் செல்வதற்காக, 45 பக்தர்கள் பயணம் செய்த பஸ், கங்கை ஆற்றில் விபத்துக்குள்ளானதில், 22 பக்தர்கள் பலி.

மே 24 : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது.

மே 31: நாட்டில் காடுகள் அதிகம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் (11.24 சதவீதம்) பெற்றது.

தமிழ்நாடு.
-----------------------

மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்தது .

மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.

மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம். அன்சுல் மிஸ்ரா புதிய கலெக்டரானார்.

மே 30: பெட்ரோல் விலை உயர்வுக்கு (ரூ. 7.50) எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் "பந்த்'.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

sathyanandhan's படம்

550462_164540123686199_1500287557_n

தன் சகோதரன் வித்தியாசமான மனத்திறனுடன் வளர்ந்ததையும் அவர் சமூகத்தால் ஒரு பாரமாகக் கருதப் பட்டதையும் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தார் நாகராணி. ஒரு தனியார் பள்ளீயில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த அவர் மனத்திறனில் சவால்களைக் கொண்டுள்ள 40 மாணாக்கரைக் கொண்ட ஒரு சிறப்புப் பள்ளியை இப்போது நடத்துகிறார். நான்கு வயது முதல் முப்பது வயது வரையானவர் இவர்கள். இவர்களில் சிலர் சென்னைத் தெருக்களில் அனாதவாகக் கைவிடப் பட்டவர்கள் ஆவர்.

2003ஆம் ஆண்டு Hope Charitable Trust என்னும் அறக்கட்டளையை நான்கு  குழந்தைகளுடன் துவங்கினார் நாகராணி. மருத்துவமும், தசைப் பயிற்சியும், கல்வியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படுகிறது இந்தப் பள்ளியில். சென்னை அம்பத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள குழந்தைகளை இந்தப் பள்ளியின் வாகனம் அழைத்து வருகிறது. காகிதப் பைகள் செய்வது, மணிகளைக் கோர்த்து மாலைகள் செய்வது, பரிசுப் பொருட்களை பெட்டிகளாகச் செய்வது என்னும் எளிய பணிகளைச் செய்யும் அளவு மனநலம் சவாலுக்குள்ளானோருக்குப் பயிற்சி தரப் படுகிறது.

இதைத் தவிர விழுப்புரம் திருச்சி போன்ற தொலைவான இடங்களில் இருந்தும் பெற்றோர் வந்து வித்தியாசமான மனத்திறன் கொண்ட தம் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று பயிற்சி எடுத்துக்கொள்ள இந்நிறுவனம் உதவுகிறது. மாநில அரசின் மானிய உதவியும் அம்பத்தூர் மக்களின் ஆதரவும் கொண்டே இந்த நிறுவனம் நடத்தப் படுகிறது. மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த காலத்தில் துணை நின்றனர் அம்பத்தூர் பகுதி மக்கள் என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார் நாகராணி.

மனநலம் சவாலான குழந்தைகளை வளர்ப்பது மிகவும் மனச்சோர்வு அ:ளிப்பது தான். ஆனால் நாகராணியை சந்தித்த பின் பெற்றோர் நம்பிக்கையுடன் திரும்பி தம் குழ்ந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறன் களை வெளிக்கொணர முயலுகின்றனர். நம்பிக்கை என்னும் பெயரிலான நிறுவனம் தன்னம்பிக்கையை மனநல சவாலை சந்திக்கும் குழதைகளுக்கும் நன்னம்ப்பிகையை அவர்களின் பெற்றோருக்கும் தந்து மனித நேயம் மரிக்காது என்னும் நம்பிக்கையை நமக்குத் தருகிறது. தொடர்பு  எண்: 9841330330. (news courtesy: Deccan Chronicle)

(Image Courtesy: Face Book)

jram178's படம்
முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி