மேலும்...
சென்ற ஆண்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம்.மே -2012 நிகழ்வுகள் சில .-------------------------------------
மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.
மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை.
--------------மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது.
மே 4: மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் விளம்பர தூதராக, "தேசிய விருது' பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமனம்.
மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாட்டில், ஜெ. உட்பட 10 முதல்வர்கள் எதிர்ப்பால் ஒருமித்த கருத்து இல்லை.
மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வர் மம்தாவை சந்தித்தார்.
மே 8: "ஹஜ்' பயணிகளுக்கான மானியங்களை குறைக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவு.
மே 9: பதவி உயர்வு, போயிங் 787 டிரீம்லைனர் விமான பயிற்சி திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம். 58 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது.
மே 13: சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட "உலகின் சக்தி வாய்ந்த அன்னை யர்கள்' பட்டியலில் காங், தலைவர் சோனியா 6வது இடத்தை பெற்றார்.
மே 14: உலகின் மிகப்பெரிய இந்து கோவில், பீகாரில் அமைய உள்ளது. இது 50 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.
மே 21: கங்கையை தூய்மைப்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. மே 22: பத்ரிநாத்திலிருந்து, ரிஷிகேஷ் செல்வதற்காக, 45 பக்தர்கள் பயணம் செய்த பஸ், கங்கை ஆற்றில் விபத்துக்குள்ளானதில், 22 பக்தர்கள் பலி.
மே 24 : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது.
மே 31: நாட்டில் காடுகள் அதிகம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் (11.24 சதவீதம்) பெற்றது.
தமிழ்நாடு.-----------------------
மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்தது .
மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.
மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம். அன்சுல் மிஸ்ரா புதிய கலெக்டரானார்.
மே 30: பெட்ரோல் விலை உயர்வுக்கு (ரூ. 7.50) எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் "பந்த்'.-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன் சகோதரன் வித்தியாசமான மனத்திறனுடன் வளர்ந்ததையும் அவர் சமூகத்தால் ஒரு பாரமாகக் கருதப் பட்டதையும் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தார் நாகராணி. ஒரு தனியார் பள்ளீயில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த அவர் மனத்திறனில் சவால்களைக் கொண்டுள்ள 40 மாணாக்கரைக் கொண்ட ஒரு சிறப்புப் பள்ளியை இப்போது நடத்துகிறார். நான்கு வயது முதல் முப்பது வயது வரையானவர் இவர்கள். இவர்களில் சிலர் சென்னைத் தெருக்களில் அனாதவாகக் கைவிடப் பட்டவர்கள் ஆவர்.
2003ஆம் ஆண்டு Hope Charitable Trust என்னும் அறக்கட்டளையை நான்கு குழந்தைகளுடன் துவங்கினார் நாகராணி. மருத்துவமும், தசைப் பயிற்சியும், கல்வியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படுகிறது இந்தப் பள்ளியில். சென்னை அம்பத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள குழந்தைகளை இந்தப் பள்ளியின் வாகனம் அழைத்து வருகிறது. காகிதப் பைகள் செய்வது, மணிகளைக் கோர்த்து மாலைகள் செய்வது, பரிசுப் பொருட்களை பெட்டிகளாகச் செய்வது என்னும் எளிய பணிகளைச் செய்யும் அளவு மனநலம் சவாலுக்குள்ளானோருக்குப் பயிற்சி தரப் படுகிறது.
இதைத் தவிர விழுப்புரம் திருச்சி போன்ற தொலைவான இடங்களில் இருந்தும் பெற்றோர் வந்து வித்தியாசமான மனத்திறன் கொண்ட தம் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று பயிற்சி எடுத்துக்கொள்ள இந்நிறுவனம் உதவுகிறது. மாநில அரசின் மானிய உதவியும் அம்பத்தூர் மக்களின் ஆதரவும் கொண்டே இந்த நிறுவனம் நடத்தப் படுகிறது. மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த காலத்தில் துணை நின்றனர் அம்பத்தூர் பகுதி மக்கள் என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார் நாகராணி.
மனநலம் சவாலான குழந்தைகளை வளர்ப்பது மிகவும் மனச்சோர்வு அ:ளிப்பது தான். ஆனால் நாகராணியை சந்தித்த பின் பெற்றோர் நம்பிக்கையுடன் திரும்பி தம் குழ்ந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறன் களை வெளிக்கொணர முயலுகின்றனர். நம்பிக்கை என்னும் பெயரிலான நிறுவனம் தன்னம்பிக்கையை மனநல சவாலை சந்திக்கும் குழதைகளுக்கும் நன்னம்ப்பிகையை அவர்களின் பெற்றோருக்கும் தந்து மனித நேயம் மரிக்காது என்னும் நம்பிக்கையை நமக்குத் தருகிறது. தொடர்பு எண்: 9841330330. (news courtesy: Deccan Chronicle)
(Image Courtesy: Face Book)
பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்பார்த்து விரும்பத் தக்கோனாய்துணிவு ஒன்றே துணையாக - நீதொடர்ந்தால் செயலை முறையாகமணியா ஒளிதர எச்செயலும் - வெற்றிமாலைத் தானே வரமுயலும்அணிசெய் தங்க விலைபோல - நீஅவனியில் உயர்வாய் நாள் போல
தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்துவள வேண்டாம் அப்படியேஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றிஏணியின் படியென தேறிடுவாய்காப்பது நம்மை நாமேதான் - நம்கண்ணைக் காப்பது இமையேதான்ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கேஎண்ணிச் செயல்பட தவறாதே
செய்யும் தொழிலே தெய்வமென - நம்பிசெய்யின் எவரும் உய்வோமெனபொய்யில் உண்மை எனக்கண்டே - அந்தபொன்னுரை தன்னை மனங்கொண்டேமெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்மேதினி தன்னில் ஏதுகுறைஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்அறிந்து நடப்பின் இல்லைபழி