தேவையான பொருட்கள்:
1.ரவா
2.கொஞ்சம் தண்ணீர்
3.1 ஸ்பூன் உப்பு
4.கொஞ்சம் நறுக்கிய வெங்காயம்
5.ஒரு கொத்து கருவேப்பிலை
6.கொஞ்சம் கடலை பருப்பு
7.1ஸ்பூன் கடுகு
8.3 காய்ந்த மிளகாய்
முதலில் சட்டியை அடுப்பில் வைத்து உலர்த்திவிட்டு, வெள்ளை ரவா அல்லது கோதுமை ரவாவை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது சட்டியில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு,வெங்காயம்,க.பருப்பு,கருவேப்பிலை இவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு, 2 கப் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பிறகு ரவாவை போட்டு கெட்டியாகும் வரை கிண்டவும். இப்போது சூடான சுவையான ''உப்புமா'' தயார். அதன் மேலே சற்று தேங்காய் துறுவலை போட்டு கிண்டினால் இன்னும் சுவை கூடும். சர்க்கரை அல்லது சட்னி தொட்டு தின்னலாம்.அவசரமாக அலுவலகம் செல்பவர்கள்,ஏழைகள் ,பிரம்மச்சாரிகளின் பிரத்யேக உணவு இது. 