தேவையான பொருட்கள்:
பச்சரிசி 2 கப்
உளுந்து 1 டேபிள்ஸ்பூன்,
பால் 1 டீஸ்பூன்
சர்க்கரை அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசி பருப்பு இரண்டையும் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும அரைத்த மாவுடன் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து மறுபடி நன்றாக தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைக்கவும்
- எண்ணை சூடாகிவிட்டதா என அறிய ஒருதுளி மாவை அதில் தெளித்துப்பார்க்கலாம்.
- எண்ணெய் சூடானதும் ஒரு அகப்பையில் மாவை எடுத்து எண்ணையில் ஊற்றவும்.
- வேகமாக ஊற்றினால் எண்ணெய் வெளியே தெறித்துவிடும்.
- மேல்பாகம் எளிதாக வேக கண் அகப்பையினால் பணியாரத்தின் சுற்றிலும் உள்ள எண்ணெயை எடுத்து பணியாரத்தின் மேல் உற்றலாம்.
- பணியாரம் உப்பி மேலெழும்பியதும் மறு புறம் திருப்பி போட்டு விட்டு அதிகம் வெந்து நிறம் கொடுத்துவிடாமல் பக்குவத்திற்கு எடுத்து விடவும்
- வெள்ளைப் பணியாரத்துடன் தொட்டுக்கொள்ள (சக்கரை) சீனி அல்லது மிளகாய்த் துவையல் சேர்த்து சாப்பிட்டாலாம்.
சாப்பிட்டுட்டு மறக்காம பதில் சொல்லுங்க
(3 votes)
கருத்துகள்
செய்து அனுப்புங்க,
Submitted by vinoth on புத, 16/06/2010 - 1:52am.
செய்து அனுப்புங்க, சாப்பி்ட்டு சொல்லுறோம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
vinoth kekirarpa. panni
Submitted by Indhurag on செவ்வாய், 13/07/2010 - 7:23pm.
vinoth kekirarpa. panni kudunga. sappittuttu solluvar.
ithu eve nalla tiffinpa.
எனக்கு பண்ணி வேண்டாம்
Submitted by vinoth on செவ்வாய், 13/07/2010 - 7:39pm.
எனக்கு பண்ணி வேண்டாம்
வெள்ளைப்பணியாரம் தான் வேணும் 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








