மாங்காய் – 1
வேப்பம்பூ - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – பாதி வெல்லம்
புளி – தேவைக்கு
தேங்காய் – தேவைக்கு
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு, மிளகாய்ப்பொடி, ஏலப்பொடி, நல்லெண்ணெய், கடுகு - தேவைக்கு
1. கடலைப்பருப்பை முதலிலேயே ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.
2. மாங்காயையும், தேங்காயையும் சின்னச் சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வேசாக அடித்தாலும் பரவாயில்லை.
3. வெல்லத்தை தனியாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. தனியாக வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வேப்பம் பூவை கசப்பு வாசனை வரும் வரை வறுத்து அதை வெல்லத்தில் போட்டு வையுங்கள்.
5. தனியாக கடலை பருப்பை வேக வைத்து ஓரளவு வெந்த பின்பு மாங்காயையும் தேங்காயையும் போட்டு நீர் வற்றும் வரை வதக்கி எடுக்கவும்.
6. தண்ணீர் வற்ற ஆரம்பித்ததும் வேப்பம்பூ, உப்பு,மிளகாய் போட்டு கிண்டி இறக்கிவிடவும்.
7. இப்போது பாகில் இக்கலவையை கலவையை சேர்த்து சிறிது நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிவிடலாம்.
சிலர் இறக்கும் முன்பு சிறிது நெய்விட்டும் இறக்கலாம்.
கருத்துகள்
சரியான சமயத்தில் தேவையான
சரியான சமயத்தில் தேவையான சமையல்

நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஹலோ! செளக்கியமா? அருமை.
ஹலோ! செளக்கியமா? அருமை.
நல்லா இருக்குமா ?????
நல்லா இருக்குமா ?????

மீனா விக்னேஷ்

















