பச்சரிசி - 1 கப்
முருங்கைக்காய் விழுது - 2 கப்
வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் -1/2 கப்
மிளகாய் வற்றல் - 4 -5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசியை சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
முருங்கைக்காய்களை வேக வைத்து விழுதை எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும்.
தேங்காய்த் துவலையும் மிளகாய் வற்றல்களையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தாளிக்கவும்.
இதில் அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய வெங்காயத்துடன் முருங்கைக்காய் விழுது புளி விழுது, பொடிகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
வதக்கிய விழுதில் சாதத்தைச் சேர்த்து நீர் வற்றும் வரை வேக விடவும்.
கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும்.
அப்பளம், தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.
கருத்துகள்
சாதாரணமாகா முருங்கக்காய்
சாதாரணமாகா முருங்கக்காய் ருசியுள்ளது. ருசிக்கு ருசி சேர்த்ததுபோல் இருக்கும்.
கல்யாணமானவங்களுக்கு உபயோகமாக
கல்யாணமானவங்களுக்கு உபயோகமாக இருக்கும் ஹிஹி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஆமாங்க நண்பா,
ஆமாங்க நண்பா, 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






