துவரம்பருப்பு 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
மசூர் பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
------
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை 1/4 கப் (ஆய்ந்தது)
உப்பு தேவையானது
-------
தாளிக்க:
நெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-----
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் முதலில்
இரண்டு கப் தண்ணீர் வைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து
அதன் மேல் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள்,சாம்பார்பொடி,இஞ்சிபூண்டு விழுது,சீரகம்,
கொத்தமல்லித்தழை,தேவயான உப்பு ("தேவையானவை" யில் குறிப்பிட்ட எல்லாவற்றையும்) சேர்த்து
நன்கு கலந்து அப்படியே குக்கரில் வைத்து 5 விசில் விடவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்து நெய்யில் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
-------
இந்த தால் செய்வது மிகவும் சுலபம்.சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.
சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish
நன்றி: Kanchana Radhakrishnan






கருத்துகள்
chapathikku nanraga irukkum
chapathikku nanraga irukkum illaiya ayya
ஆமாம். சப்பாத்திக்கு ஏற்ற
ஆமாம். சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஷ். நன்றி.