Skip to main content

வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள்

கவிஞர் கே இனியவன்'s படம்

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!

(150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் )

கவிஞர் கே இனியவன்'s படம்

கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..
ஓசையில்லாத காட்டில் குயில் ஓசை ...
இடம் பெயர்ந்து வரும் உதிர்ந்த இலைகள் ..
புது ஓவியம் படைக்கும் மரக்கிளைகள் ..
உணர்வை தூண்டும் செவ்வானம் ...
உருவம் மாறிய உறைபனி ...
உருகி காதலிக்கும் நீரும் மண்ணும் ...
உண்ண மறக்கும் வேரும் மரமும் ...
வெயில் கால மழை ...!!!

(150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் )

கவிஞர் கே இனியவன்'s படம்

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!

(150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் )

Mano Red's படம்

சில நிமிடம் மனித வாழ்க்கையை 
திரும்பி பார்த்தால், 
அவன் எதிர்பார்த்து ஏமாந்ததை விட 
அதுவாக கிடைத்தவையே அதிகம்..!! 

மனிதன் புதிதாய் ஒன்றை 
பார்ப்பதற்கு முன்பே 
கற்பனைகள் செய்து விடுவான்..!! 
நேரில் அதை பார்க்கும் போது 
அதுபோல் இல்லையெனில் 
உடனே கற்பனையில் சில 
பிழை திருத்தம் செய்து விடுவான்..!! 

மனிதன் நினைத்தவை எல்லாம் 
நடக்க வேண்டுமென 
எதிர்பார்ப்பான்..!! 
எப்படியும் நடக்காதென 
தெரிந்தே தனக்கு தானே 
அறிவுரை கூறிகொள்வான்..!! 

மனிதன் தன்னை எப்போதும் 
இந்த உலகத்திற்கு அறிவாளியாக 

கவிஞர் கே இனியவன்'s படம்

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

கவிஞர் கே இனியவன்'s படம்

கிழிந்த‌ காற்சட்டையுடன் ...
திரிந்த‌ அந்த‌ நாட்களை ,,
மீட்டுப்பார்க்கிறேன்...!!!

மின்மினி பூச்சியை பிடித்து ..
தீப்பெட்டிக்குள் போட்டு...
அது மூச்சு போக‌ ஒரு ...
ஓட்டை போட்டு வைத்தேன் ...
எனக்கருகே வைத்தும் தூங்கினேன்...
எழுந்து பார்த்தேன் போட்ட‌ ஓட்டையால் ..
ஓடிப்போனது மின்மினிபூச்சி ...
அழுதேன் தேடினேன் துடித்தேன் ...

மக்கு மண்டைக்கு விளங்கவில்லை...
மின்மினி கற்று தந்தது உன‌க்கு...
நீயோ சுதந்திரமில்லாத‌ நாட்டில் ...
வாழுகிறாய் நான் ஏன்..???
அப்படி வாழவேண்டும் ...!!!

yogalakshmi's படம்

என் திருமணம்  சொர்க்கத்தில் நிச்சியிக்க‌ பட‌ வில்லை

 

சொக்க‌ தங்கத்தில் நிச்சியிக்கப்பட்டது

 

திருமணம்  ஆயிரங்காலத்து  பயிரா

 

உண்மைதான்  போலும்

 

ஆயிரம் காலமாக‌ பயிர் விளைந்த‌  எங்கள்  நிலத்தை  விற்றல்ல‌வா   நடந்திருக்கிறது

 

திருமணம்

 

ஆயிரங்காலத்து  பயிர் தான்

yarlpavanan's படம்

வணக்கம், வணக்கம் என
பல முறை சொன்னாலும்
என்னை
எவரும் திரும்பிப் பார்க்கவில்லையே!
நான்
வணக்கம் சொன்ன நேரம்
ஏழரைக்குப் பின் 
எட்டுக்கு முன்னாகத் தானிருக்குமே!
எல்லோரும்
நல்லாத் தெரிஞ்சவங்க தான்...
ஆனால், நான்
வணக்கம் சொன்ன நேரந்தான்
பிழையாகப் போச்சோ தெரியவில்லையே!
மீளவும்
சிலருக்கு வணக்கம் சொன்னேன்...
வேலைக்குப் போற நேரம் பார்த்து
வணக்கம் சொல்லுறியே
ஒரு மணித்துளி பிந்தினால்
உரூபா ஐந்நூறு வெட்டு
பதிலுக்கு
வணக்கம் சொல்ல இயலாதென
ஓடிப் போறவள்
என்ர முப்பத்தோராம் காதலியாச்சே!

அ.கு.அன்பரசன்'s படம்

மைத்துணனுக்கு மண நாள் வாழ்த்து மடல்

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தான்
கிழக்கு வானம் சூரியனைப் பிரசவிக்கிறது – ஆனால்
அது இன்று போல் என்றுமே உங்களுக்கு பிரகாசித்ததேயில்லை

சேவல் ஒவ்வொரு நாளும் தான் – தன்
இனியக் குரலால் அதி காலையை வரவேற்கிறது – ஆனால்
அதன் குரல் இன்று போல் என்றுமே உங்களுக்கு இனித்ததேயில்லை

நிச்சயித்த நாள் முதலாய்
நீங்கள் ஒருவருக்குள் ஒருவரை
எண்ணியெண்ணி ஏங்கி மகிழ்ந்த நாட்கள் – இதோ

yogalakshmi's படம்

காந்திக்கு

 

தெரியவில்லை

 

தாளுக்கு தாள்  தன்  மதிப்பு  மாறும்  என்பது

Pages