சரவணன்'s படம்

கடவுளே..! மனிதனை ஏன் படைத்தாய் ?


கடவுளே...!
மனிதனை ஏன் படைத்தாய் ?

உன்னால் தான் நாங்கள்

பிறந்தோம்
அழுதோம்
சிரித்தோம்
பேசினோம்
சிந்தித்தோம்
பசியால் வாடினோம்

சக மனிதனைக் கொன்றோம்
தன் வயிறு
தன் மக்கள்
தன் உற்றார்
தன் நலம் என்று
சுய நலம் காத்தோம்

தன் இனம் அழிவதை
தடுக்காமல் வேடிக்கை பார்த்தோம்
அழித்தவனுக்கும் ஆயுதம் கொடுத்தோம்
இன அழிவில்
அரசியல் ஆதாயம் தேடினோம்
நாங்கள் செய்த தவறுகளுக்கு

8
Your rating: None Average: 8 (1 vote)

Ponvannan's படம்

பேச்சு


திருமணத்திற்கு முன்பு

காதலன் பேசினான்...
அவன் பேச்சை
அவள் காது கொடுத்துக் கேட்டாள்..
அமைதியாக....

திருமணத்திற்குப் பின்பு

காதலி பேசினாள்...
அவ‌ள் பேச்சை
அவன் காது கொடுத்துக் கேட்டான்...
அமைதியாக...

ஒரு குழந்தைக்குப் பிறகு

இருவருமே காரசாரமாகப் பேசினர்...
அவர்கள் பேச்சை
அக்கம் பக்கத்தினர் காது கொடுத்துக் கேட்டனர்...
அதிசயமாக...

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

rajudranjit's படம்

நல்லது செய்!


நாளைய உலகம் நம்மை வாழ்த்தும்
நயமுடன் நல்லதை நால்வருக்கு செய்யின்

நல்லதென்பது நம்மவருக்கு மட்டுமின்றி
நாம் வாழும் உலகத்தவர்க்கும் இணைந்தே.....

தீயது இணைய தீர்க்கமாய் வெட்டியெறி
நல்லதெனில் எதிரியையும் சேர்த்துக்கொள்

உடலது உழைக்க மனமது உறங்காதே
மனமது விழிக்க மகத்துவம் காண்பாய்

நாம் வாழ நால்வரைக் கெடுக்காதே
நால்வரைக் கெடுக்க நாளைய உலகு காரியுமிழும்

6
Your rating: None Average: 6 (1 vote)

hidayarisvi's படம்

உறவுகள்...!


பணப் போர்வை
எம் உடலை மூடியிருப்பின்
பாசங்கள்-
அதிகரிக்கும்....!!

பணம்-
இன்றேல்
மனிதப் பிணமாய்
உடல் சேரும்...!
உறவுகள்-
உள்ளத்தை விட்டுப் போகும்..!

உயர்ந்தநிலையிலே
உவந்து புகழ் பாடும்
உறவுகள்-தாழ்வாய்
வறுமை வீட்டிற்குள்
வாழும் பொழுதுகளில்
தூரத்தே போய் நின்று
துயரப் படுத்தும்......!

உள்ளத்து விழியைக்
குருடாக்கிப் பார்க்கும்
உறவுகளின்
"பார்வைகள்"
வெறும் போலிகளே..!

5.75
Your rating: None Average: 5.8 (4 votes)

yarlpavanan's படம்

கிழிஞ்சு போச்சு...


திரைப் படங்களில்
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

5.8
Your rating: None Average: 5.8 (5 votes)

yarlpavanan's படம்

பொழுதுபோக்கிற்காக...


நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!

5.66667
Your rating: None Average: 5.7 (6 votes)

anuridha's படம்

என் கேள்விகள்!


அனைவரும் ஆழ்ந்த
உறக்கத்தில்...
நானோ ஆழ்ந்த யோசனையில்!
மாடிப் படியில் அமர்ந்துகொண்டு
உலகத்தில் படியை பற்றிய
சிந்தனை!
நாம் எவற்றை அழகு
என்று கூறுகிறோம்?
இயற்கையைத் தான்
என்பதில் ஐயமில்லை
அனைத்தையும் வெளிச்சமிட
உதவும் பகலையா?
அழகை மர்மமாக்கப்
பிறந்த இரவையா?
அல்லது இரவின் ஆழத்தைக்
குறைக்க தோன்றிய நிலவையா?
அப்படியென்றால்
நிலவுக்கு அழகூட்டியவன் எவன்?
நிலவையும் ஏன்

7
Your rating: None Average: 7 (4 votes)

BaluGuruswamy's படம்

தருமத்தின் தடத்தில்.


கொடுமைக்கும் கடுமைக்கும்
கொடிய தளவாடங்கள்
வெளிக் காரணமானாலும்,
கொடிய மனோபாவமே
உண்மைக் காரணமாகும்.
எனவே மனோபாவ மர்மங்களில்
சத்துவ தர்மங்களை......
முடிந்தவரை நிரப்பினால் அல்லது பரப்பினால்
கருமங்களில் சிரமங்கள் மறையும்.
அன்பிற்கும் பண்பிற்கும்
அது அஸ்திவாரமாகி
அமைதியையும் ஆனந்தத்தையும்
அகிலத்தில் கொணரும்.
எனவே சிந்தையும் செயலும்
தருமத்தின் தடத்தில் செல்க.

பாலு குருசாமி.

6.83333
Your rating: None Average: 6.8 (6 votes)

rajudranjit's படம்

உன்னை அறி!


சிந்திக்க சிந்திக்க பெருகும் அறிவு
நித்தம் நித்தம் அதன் நிகழ்வு
உத்தமம் இருப்பினும் அளவிற்குள்!

இல்லா பொருளை ஆழ்ந்து சிந்திக்காதே
இருக்கும் பொருளை அலட்சியம் செய்யாதே
கருப்பொருள் எதுவாயினும் சிந்திக்க சிறப்படைவாய்!

வருவது இலாபமோ இல்லையோ ஆராயாதே
தருவது உன்னதம் அது மறவாதே
உறக்கத்திலாழ ஏதறிவாய் நீயெனக் கூறு!

சொர்க்கம் இருக்கு உன்னருகில் பார்
நரகமும் அது போலே உன்னருகில்

4.5
Your rating: None Average: 4.5 (4 votes)

meenavignesh's படம்

படபடப்பு


மூளை அவளை பார்க்க சொல்கிறது,
பேச சொல்கிறது,விரும்ப சொல்கிறது,
அனிச்சையாய் அவள் வரும் பாதையில்,
தலை தானாய் திரும்ப சொல்கிறது,
ஆனால், இதயம் மட்டும்,
வெறுமென துடிக்க மட்டுமே செய்கிறது,
கடைசியாய் அதன் படபடப்பில் கலந்து விடுகிறது என் காதல்.

-மீனா விக்னேஷ்

5
Your rating: None Average: 5 (3 votes)




Syndicate உள்ளடக்கம்