வாழ்க்கை கவிதைகள்
உயிர் நண்பன் .. முதல் காதலி .. வரம்பு மீறாத பெற்றோர் ... காலைக்குளிர் .. இரவு வெயில் .. மாலை தளிர் ... ஆவியாய் அலையும் நீர் .. நீராய் மாறும் புகை .... முத்தாய் மாறும் மழைத்துளி .. ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் .. அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி .. காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
(150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் )
கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு .. விழிகளை கவரும் பூப்படைப்பு ... சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ... தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி .. ஓசையில்லாத காட்டில் குயில் ஓசை ... இடம் பெயர்ந்து வரும் உதிர்ந்த இலைகள் .. புது ஓவியம் படைக்கும் மரக்கிளைகள் .. உணர்வை தூண்டும் செவ்வானம் ... உருவம் மாறிய உறைபனி ... உருகி காதலிக்கும் நீரும் மண்ணும் ... உண்ண மறக்கும் வேரும் மரமும் ... வெயில் கால மழை ...!!!
வெட்ட வெளியை வேடிக்கை பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
நான் திரிந்த இடங்கள் திமிர் கொண்டு நடந்த இடங்கள் என் உறவுகள் நடந்த இடங்கள் எங்களையார் கேட்பார்கள் என்று வீராப்புடன் திரிந்த இடங்கள் இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது
கிழிந்த காற்சட்டையுடன் ... திரிந்த அந்த நாட்களை ,, மீட்டுப்பார்க்கிறேன்...!!!
மின்மினி பூச்சியை பிடித்து .. தீப்பெட்டிக்குள் போட்டு... அது மூச்சு போக ஒரு ... ஓட்டை போட்டு வைத்தேன் ... எனக்கருகே வைத்தும் தூங்கினேன்... எழுந்து பார்த்தேன் போட்ட ஓட்டையால் .. ஓடிப்போனது மின்மினிபூச்சி ... அழுதேன் தேடினேன் துடித்தேன் ...
மக்கு மண்டைக்கு விளங்கவில்லை... மின்மினி கற்று தந்தது உனக்கு... நீயோ சுதந்திரமில்லாத நாட்டில் ... வாழுகிறாய் நான் ஏன்..??? அப்படி வாழவேண்டும் ...!!!
என் திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்க பட வில்லை
சொக்க தங்கத்தில் நிச்சியிக்கப்பட்டது
திருமணம் ஆயிரங்காலத்து பயிரா
உண்மைதான் போலும்
ஆயிரம் காலமாக பயிர் விளைந்த எங்கள் நிலத்தை விற்றல்லவா நடந்திருக்கிறது
திருமணம்
ஆயிரங்காலத்து பயிர் தான்
வணக்கம், வணக்கம் எனபல முறை சொன்னாலும்என்னைஎவரும் திரும்பிப் பார்க்கவில்லையே!நான்வணக்கம் சொன்ன நேரம்ஏழரைக்குப் பின் எட்டுக்கு முன்னாகத் தானிருக்குமே!எல்லோரும்நல்லாத் தெரிஞ்சவங்க தான்...ஆனால், நான்வணக்கம் சொன்ன நேரந்தான்பிழையாகப் போச்சோ தெரியவில்லையே!மீளவும்சிலருக்கு வணக்கம் சொன்னேன்...வேலைக்குப் போற நேரம் பார்த்துவணக்கம் சொல்லுறியேஒரு மணித்துளி பிந்தினால்உரூபா ஐந்நூறு வெட்டுபதிலுக்குவணக்கம் சொல்ல இயலாதெனஓடிப் போறவள்என்ர முப்பத்தோராம் காதலியாச்சே!
மைத்துணனுக்கு மண நாள் வாழ்த்து மடல்
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தான் கிழக்கு வானம் சூரியனைப் பிரசவிக்கிறது – ஆனால் அது இன்று போல் என்றுமே உங்களுக்கு பிரகாசித்ததேயில்லை
சேவல் ஒவ்வொரு நாளும் தான் – தன் இனியக் குரலால் அதி காலையை வரவேற்கிறது – ஆனால் அதன் குரல் இன்று போல் என்றுமே உங்களுக்கு இனித்ததேயில்லை
நிச்சயித்த நாள் முதலாய் நீங்கள் ஒருவருக்குள் ஒருவரை எண்ணியெண்ணி ஏங்கி மகிழ்ந்த நாட்கள் – இதோ
காந்திக்கு
தெரியவில்லை
தாளுக்கு தாள் தன் மதிப்பு மாறும் என்பது