தன்னம்பிக்கை கவிதைகள், Thannambikkai Kavithaigal
சிலந்திகூட வலைபின்னி
சிறு பூச்சிக்காக காத்திருக்கு!
பட்டாம்பூச்சி பசியாற
தேன்மலரைத் தேடி பறந்திருக்கு!
பூமியில் தினமும் இரைதேட
வானில் பறக்குது கழுகப்பா!
உணவுக்காக உன்னை நான்
உழைக்கச் சொன்னால் அது தப்பா?
ஏனோ ஒரு செயலும் அசையாது
சில நேரங்களில் இப்படித்தான்
இடிந்த சுவராய் மனம் ஏனோ
சுக்காய் நொறுங்கிப்போகும்
ஈரமின்றி நெஞ்சு வறண்டு போகும்
காரணமே இன்றி கண்ணீர்
ஆறாய்ப் பெருகும் இன்னதென்று
தெரியாது ஏதுன்னு புரியாது
மனசு பாறாங்கல்லாய் கனக்கும்
இதய துடிப்பு அதிகரிக்கும்
இமை இரண்டும் படபடக்கும்
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்குமுன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
கையளவு மனசில்
நன்மையை நிறைப்போம்..!
கடலளவு கனவில்
நல்லவை நடக்கும்...!
நாஞ்சில்
சுவரில் கிறுக்காதே .... விளையாடும் குழந்தைகளின் ... தாயின்- தடித்த வார்த்தை ..!!!
கிறுக்கட்டும் விட்டுவிடு ..... தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!
பல ஆயிரம் கொடுத்து ... வர்ணம்பூசிய சுவர் -அவளின் ... ஏக்கவார்த்தை...!!!
உனக்கு தெரியுமா ....??? இன்று நவீன சித்திரம் என்று ... கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...
யார் கண்டது கண்ணே ... எதிர்காலத்தில் நவீன ஓவியன் ... நம்வீட்டில்.....??? நம்பிக்கை வார்த்தை ...!!!
ஏதோ ஒரு சில தவறுகள்நம் பல சரிகளை அடிமையாக்கிஆண்டு விட்டு செல்வதற்க்கு மறுபெயர் தான்வாழ்க்கை...
இல்லை எனக் கூற ஏதுமே இல்லை என் பகுதிக்கவிதைகளையாரோ தொடர்கிறார்கள்என் மறைவிற்குபிறகுயாரோ வரப் போகிறார்கள்
ஒன்றை இழந்ததும் ஒன்று கிடைக்கிறதுஜனனம் மரணம்சுழற்சி நிற்காதுஇருக்கும் வரைக்கும்
இருப்போரை நேசிப்போம்நேசதேசத்தில்என்றைக்கும் இல்லைநிபந்தனைகள்...
வெற்றி வரும் பொது குதிரை வேகம் ஓடு !
வெற்றி கிடைத்த பின் குதிரையை விட வேகமாக ஓடு !
வெற்றி உனிடம்ம் நிலைத்து நிற்க.
சூரியனும் சந்திரனும் .. மாறி மாறி வருவது ... வெறும் இரவு பகல் .. விளையாட்டல்ல ... உன் வரவு செலவு கணக்கும் தான் ... வரவு உன் உழைப்பு .. செலவு உன் சோம்பல் ...