Skip to main content

தன்னம்பிக்கை கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதைகள், Thannambikkai Kavithaigal

karthikemperror's படம்

சிலந்திகூட வலைபின்னி 

சிறு பூச்சிக்காக காத்திருக்கு!

 பட்டாம்பூச்சி பசியாற 

தேன்மலரைத் தேடி பறந்திருக்கு!

பூமியில் தினமும் இரைதேட‌

வானில் பறக்குது கழுகப்பா!

உணவுக்காக உன்னை நான்

உழைக்கச் சொன்னால் அது தப்பா?

pandima's படம்

ஏனோ ஒரு செயலும் அசையாது 

சில நேரங்களில் இப்படித்தான்

இடிந்த சுவராய் மனம் ஏனோ 

சுக்காய் நொறுங்கிப்போகும் 

ஈரமின்றி நெஞ்சு வறண்டு போகும் 

காரணமே இன்றி கண்ணீர் 

ஆறாய்ப்​ பெருகும்  இன்னதென்று 

தெரியாது ஏதுன்னு புரியாது 

மனசு பாறாங்கல்லாய் கனக்கும்

இதய துடிப்பு அதிகரிக்கும் 

இமை இரண்டும் படபடக்கும் 

rajamuhunthan's படம்
 
 

முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம்  பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது


நாஞ்சில்'s படம்

கையளவு மனசில்

நன்மையை நிறைப்போம்..!

கடலளவு கனவில்

நல்லவை நடக்கும்...!

 

நாஞ்சில் 

கவிஞர் கே இனியவன்'s படம்

சுவரில் கிறுக்காதே ....
விளையாடும் குழந்தைகளின் ...
தாயின்- தடித்த வார்த்தை ..!!!

கிறுக்கட்டும் விட்டுவிடு .....
தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!

பல ஆயிரம் கொடுத்து ...
வர்ணம்பூசிய சுவர் -அவளின் ...
ஏக்கவார்த்தை...!!!

உனக்கு தெரியுமா ....???
இன்று நவீன சித்திரம் என்று ...
கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...

யார் கண்டது கண்ணே ...
எதிர்காலத்தில் நவீன ஓவியன் ...
நம்வீட்டில்.....???
நம்பிக்கை வார்த்தை ...!!!

Mano Red's படம்

மினுமினுக்கும் மின்னல் மனம், 
பளபளக்கும் பச்சை நினைவு, 
கலகலவென கலங்கமின்றிய புன்னகை, 
ஜிலுஜிலுவென மகிழ்வாய் அப்போது திகழ்ந்தேன்..!

சிடுசிடுவென கோவம் தலைக்கேறும், 
கரகரக்கும் குரலாய் பேச்சும் மாறும், 
படபடவென பொரிந்து புகைந்து 
கிடுகிடுவென என்னை தாழ்த்தி கொண்டேன்..!! 

பரபரக்கும் கண்கள் கொண்டே 
திகுதிகுவென தீ பிழம்பு காட்டி, 
விறுவிறுவென வேகத்தோடு 
தகதக அனலாய் என்னை நான் அழித்துவிட்டேன்..!! 

சலசலப்பில்லாமல் மீண்டு வாழ நினைத்து 
திருதிருவென சந்தேகம் கொள்ளாமல், 
மடமடவென மீண்டும் திரும்பி 

pakee's படம்

ஏதோ ஒரு சில தவறுகள்
நம் பல சரிகளை அடிமையாக்கி
ஆண்டு விட்டு செல்வதற்க்கு மறுபெயர் தான்
வாழ்க்கை...

pakee's படம்

இல்லை எனக் கூற ஏதுமே இல்லை 
என் பகுதிக்கவிதைகளை
யாரோ தொடர்கிறார்கள்
என் மறைவிற்குபிறகு
யாரோ வரப் போகிறார்கள்

ஒன்றை இழந்ததும் 
ஒன்று கிடைக்கிறது
ஜனனம் மரணம்
சுழற்சி நிற்காது
இருக்கும் வரைக்கும்

இருப்போரை நேசிப்போம்
நேசதேசத்தில்
என்றைக்கும் இல்லை
நிபந்தனைகள்...

Anonymous's படம்

வெற்றி வரும் பொது குதிரை வேகம் ஓடு !

வெற்றி கிடைத்த பின் குதிரையை விட வேகமாக ஓடு !

வெற்றி உனிடம்ம் நிலைத்து நிற்க.

கவிஞர் கே இனியவன்'s படம்

சூரியனும் சந்திரனும் ..
மாறி மாறி வருவது ...
வெறும் இரவு பகல் ..
விளையாட்டல்ல ...
உன் வரவு செலவு கணக்கும் தான் ...
வரவு உன் உழைப்பு ..
செலவு உன் சோம்பல் ...

Pages