நீ தலைமுடி முடியும் வேளையிலே
ஒரு கற்றை காற்றினை
கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !
தலை சுற்றி நிற்கிறது காற்று
தலைமுடியோடு மல்லிகையின்
வாசத்தின் வசம் உண்டு !
உனது பவனிக்கு பின்னால்
எனது அறையும்
அறை சார்ந்த அசையா பொருளும்
இயல்பின்றி தவிக்கின்றன !
நான் அழகா !
என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு
நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?கேட்டவள் வேறு யாருமில்லைபட்டு நொந்தவளின்கிட்ட நெருங்கிய தோழியே!
ஏங்கி நிற்பது துன்பம்
வழங்கு வரும் இன்பம்
கிட்டாதது ஏமாற்றம்
குடைக்குள் மட்டும் மழை
மழலை மட்டும் தாய் மொழி
சாலையின் இருபுறமும்
பனிபடர்ந்த புற்கள்
உடல்கள் போராடி `உயிர்ச்சத்து விரயமாக்கி கடலலைப் போலவே கலந்தழிந்துத் தளர்ந்து சுடலையில் வெந்து சாம்பலாகிக் கரைவதற்கு சடலம் உயிர்ப்பெற்ற மனிதனோ?
தன்னின்பப் பூர்த்திக்குப் பெண்ணின்பம் சேர்த்து நன்னின்பம் போர்த்திய நச்சரவ== மாயைக்குள் மூழ்கியெழும் மூச்சுவாழ் மூடமனிதர் மாண்டும் பல்கிப்பெருகும் பிறவியறுப் பதெப்போதோ?
சிலந்திகூட வலைபின்னி
சிறு பூச்சிக்காக காத்திருக்கு!
பட்டாம்பூச்சி பசியாற
தேன்மலரைத் தேடி பறந்திருக்கு!
பூமியில் தினமும் இரைதேட
வானில் பறக்குது கழுகப்பா!
எதுவுமே இல்லை யென்று
கும்பிட்டு
கேட்டவனை ஏமாற்றி
எல்லாம் இருப்பவனின்
வீட்டில்
ஓய்வெடுக்கிறாரோ
கடவுள்?
கண்டுபிடித்துத் தாருங்கள்!
கருவறையில்
காணாமல் போன
என் மகனை!
விதையில் இருந்து விடுதலை
முளை பயிர் சொன்னது..!
மேகத்தில் இருந்து விடுதலை
மழை துளி சொன்னது..!