சிறுவர் கவிதைகள், Siruvar Kavithaigal
ஏய் குழந்தைகளே.......! தயவு செய்து கற்றுத்தாருங்கள் எப்படி துன்பத்தையும் இன்பத்தையும் உடனுக்குடன் மறந்துவிடுகிறீர்கள் -ஞானி போல்..? கபடமில்லாமல் எப்படி எல்லோரையும் பார்த்து சிரிக்கவும் முடிகிறது.. மீண்டும் கேட்கிறேன் எங்களுக்கும் கற்றுத்தாருங்கள் ..!
விழித்திரு பாப்பா விழித்திரு சிறு வயதில் நீ அடம் பிடிப்பாய் .. அதனை சமாளிக்க முடியாதவர்கள் பூச்சாண்டி வரும் என்று .. உன்னை வெருட்டி -.உன் வீரத்தையே கிள்ளி விடுபவர்களே உண்மையான பூசாண்டிகள் ...விழிப்பாக இரு ..
பள்ளிப்பருவத்தில் போட்டி போட்டிஎன்று சொல்லியே உன் சுய சிந்தனையை கிள்ளி விடுவார்கள் ..கவனம் இவர்கள் தான் முழு சுயநல வாதிகள்
இளைஞர் பருவத்தில் அவனோடு சேராதே இவனோடு சேராதே -நம் சாதியில்லை சாதிவெறி பிடிந்த நாதாரிகள் இவர்கள்
அறிந்திடு பாப்பா அறிந்திடு ... யானையிடம் பலமுமுண்டு ... பலத்துக்கேற்ற பொறுமையுண்டு ... நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
அறிந்திடு பாப்பா அறிந்திடு ... குரங்கிடம் கொள்கையுண்டு .. கொள்கைக்கேற்ற உறுதியுண்டு .. நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
அறிந்திடு பாப்பா அறிந்திடு .. நரியிடம் புத்தியுண்டு .. புத்திக்கேற்ற தந்திரமுண்டு .. நீயும் அதை பெற்றுவிடு நீடூடி வாழ்ந்துவிடு ....
ஆசானாக நான் இருந்தால் .. அறிவுரைகள் கூறிடுவேன் சின்னஞ் சிறிய பாலகருக்கு .. நல்ல கல்வி நான் தருவேன் ...!
டாக்டராக நானிருந்தால் .. நாடிபிடித்து பார்த்திடுவேன் .. ஊக்கத்தோடு நோயாளிகளுக்கு .. ஊசிமருந்து கொடுத்திடுவேன் .....!
மனிதனாக நீயிருந்தால்... மனிதநேயத்துடன் வாழ்ந்திடுவாய் மனிதர்களை மட்டுமல்ல -பிற உயிரையும் மதித்திடுவாய் ...!
கள்ளிக்காட்டில் போன அம்மா எப்போ திரும்பி வருவாளோ பள்ளிக்கூடம் போவேனோ பாடம் தன்னை படிப்பேனோ கூட்டமாக வாழ்கின்றோம் காட்டம் என்மீதேதேனோ வாட்டம் போக்கும் படிப்பென்று நாட்டம் கொண்டேன் நாளெல்லாம் சோறு தின்ன வேண்டுமென்றால் காட்டில் பெற்றோர் செல்ல வேண்டும் தம்பிப்பாப்பா தனியாக