சமுதாய கவிதைகள், Samuthaya Kavithaigal
எண்ணப் பிழையும் எழுத்துப் பிழையும் கண்ணின் பிழையும் கருத்துப் பிழையும் பண்ணின் பிழையும் பொருள் பிழையும் பண்ணும் பிழையெல்லாம் பொறுக்கவே!
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்குமுன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
திரும்பிப்பார்க்கிறேன் .... முப்பது வருடங்க்களின் ... புள்ளிப்புள்ளியாய் நிறைய .. சின்ன சின்ன நினைவுகள் ... பாடசாலை இடைவேளையில் .. பக்கத்து வீட்டு மாமரம் ... படாத பாடு படும் ... பூ பிஞ்சு காய் என்று பாராமல் .. எல்லாம் கீழே விழும் ... மாமரத்துக்கு வாயிருந்தால் .. கண்டபடி பேசியிருக்கும் ...
எம்மைக் கண்டால்... அணில்களும் சாபமிடும் .. அதுகளின் உணவிலும் ... கைவைத்தவர்கள் நாங்கள் ....
சுமையென நகரும் வாழ்க்கையில்
காலணிகூட சுமைதானே !
என்ன தேடி வந்தேன்
நினைவில்லை
என்ன தொலைத்திருக்கிறேன்
என்பதில் பொய்யுமில்லை !
ஊர் கூடி கலந்து பேசி
ஒதுக்கி வைத்தது போல
ரியாலும் திரகமும்
ஆசை வார்த்தை கூறி
அழைத்து வந்தது !
கால் தடம் பதியாமலே
புற்கள் இல்லா தரையின் மேல்
ஆசை துறந்த
புத்தர்கள் பல இங்கே !
நான் !
மடத்தில் இணைந்து
ஆண்டுகள் ஐந்தும் நிறைவு செய்துவிட்டேன் !
நடை பழகி தந்த தந்தையின்
கை பிடித்து நடந்த நினைவு
சுவரில் கிறுக்காதே .... விளையாடும் குழந்தைகளின் ... தாயின்- தடித்த வார்த்தை ..!!!
கிறுக்கட்டும் விட்டுவிடு ..... தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!
பல ஆயிரம் கொடுத்து ... வர்ணம்பூசிய சுவர் -அவளின் ... ஏக்கவார்த்தை...!!!
உனக்கு தெரியுமா ....??? இன்று நவீன சித்திரம் என்று ... கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...
யார் கண்டது கண்ணே ... எதிர்காலத்தில் நவீன ஓவியன் ... நம்வீட்டில்.....??? நம்பிக்கை வார்த்தை ...!!!
சுதந்திரத்தை பற்றி ... கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ... முற்றத்தில் வந்து விழுந்த்தது ... காகங்களால் கொத்தப்பட்ட ... குருவியொன்று ....!!!
எடுத்த குருவியை ... மெதுவாக வருடி ... முடிந்தளவு பாதுகாத்து ... பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ... வேண்டாமப்பா ..நிறுத்துங்க .. அதை கூட்டில் வளர்ப்போம் .. தடுத்தான் செல்ல மகன் ...!!!
வேண்டாம் மகனே ... அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது .. பறக்க விட்டேன் குருவியை ..!!!
நான் திரிந்த பாதை ... நான் ரசித்த பாதை ... அழகான இருபுறமும் ... அடர்ந்த மரங்கள் ... கணவன் மனைவிபோல் ... உயரமான குட்டையான அருகருகே .. மரங்கள் ..காற்றடித்தால் ஒன்றை ஒன்று ..
உரசும் ஊடல் ...!!!
தரையில் வண்ண வண்ண பூச்சிகள் .. இசைக்கச்சேரி நடார்த்தும் குருவிகள் ... சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகை ..
இப்போ ....!!!
இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் ... ஒரே நிறத்தில் அசையாத பிணம்போல் ... ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???
வறுமையில் வாடியது குடும்பம் ... சிறு உண்டியலில் சேமித்தார் ... அம்மா சிறுதொகை பணம் .... ஓருநாள் எடுத்துவிட்டேன் ... உண்டியலை சொல்லப்போனால் ... களவுதான் ...!!!
நண்பர்களோடு உண்டு மகிழ்ந்தேன் ... அவளவுதான் ..!!! இரவு அப்பாவிடம் சொல்லி எனக்கு ... நல்ல பூசை ...!!!
இப்போ உண்டியல் முட்டிய காசுண்டு .. சொல்லிக்கொடுக்க அம்மாவும் இல்லை .. அடிக்கிறத்துக்கு அப்பாவும் இல்லை ...!!!
இந்த மூடநம்பிக்கையை .... யாரிடம் சொல்லி அழுவது ...??? நோயன்றால் வைத்தியசாலைக்கு .. போகவேண்டியவர்கள் ...
பூக்களோடும் பிஞ்சுகலோடும்... சாமியார் மடத்தில் ... போதாததற்கு குழந்தை வரம் ... வேண்டியும் இளம் பெண்கள் ...
எல்லோருக்கும் தீர்வு ...
விளைச்சல் வயல் வெளியில் ... தனியாக நின்ற அரசமரத்தை ... ஏழுதடவை சுற்றுவதுதான் ...
கூட்டம் சுற்றி சுற்றியே ... விளைச்சல் நிலம் தரிசு நிலமாகியது ...
நாய் வீட்டைகாக்கும் ... இது பழங்கஞ்சி வார்தையாகிட்டுது ...!! பாசத்தோடு செல்லமாக வளர்த்த ... எம் பொம்மி குட்டியை காணவில்லை ... கண்டுபிடித்து தருபவர்களுக்கு ... சன்மானமும் உண்டு ... - பத்திரிகையில் விளம்பரம் -