Skip to main content

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள், Kadhal Kavithaigal

Mano Red's படம்

உன்னை தேடி தேடி எங்கோ அலைந்தேன், 
தேடி பார்த்து தோற்று போனால் 
என் உலகம் அழிப்பேன்...!! 
நீ வானம் பறக்க 
நான் மேகம் திறப்பேன், 
என் பாதம் வலிக்க 
உன்னை தூக்கி சுமப்பேன்..!! 
சிரித்தாலும் அழுதாலும் ரசிப்பேன், 
வெறுத்தாலும் அடித்தாலும் பொறுப்பேன்..!! 

கேள்விகளை கேட்டு தொலைப்பாயே, 
பதிலை கேட்டால் சிரித்து விடுவாயே, 
நகம் கடிக்கும் அறிவாளி போல நீ 
முட்டாளாகி நிற்பது நானல்லவா..?? 

குழந்தை தேடும் பொம்மை நீ தானே, 
தேடி தொலைந்த குழந்தை நான் தானே, 
எப்போதும் உன் பின்னால் 
வருவதும் நான் தானே...!! 

Mano Red's படம்

மனிதன் தோன்றிய காலம் இருந்தே 
ஆணுக்கு பெண் அடிமை, 
என்ற ஆதிக்கத்தை காதல் வென்றது 
ஆண் பெண்ணுக்கு அடிமையான போது..!! 

உருகி உருகி காதல் வளர்ப்பதும் 
பெண் தான், 
முழுவதும் காதலில் உருகி விட்டால் 
நீ யாரென்று கேட்டு ஓடுவதும் 
பெண் தான்..!! 

தனக்கென காத்திருக்க சொல்வாள், 
நேரம் தவறி அவள் வந்து, 
காத்திருந்தவனை முட்டாள் என்பாள்..!! 

சிரிப்பது பிடிக்கும் என்பாள், 
துக்கம் மறைத்து அவளை 
சிரிக்க வைத்தால் கோமாளி என்பாள்..!! 

அதிக அக்கறை வேண்டும் என்பாள், 
அக்கறையுடன் ஆண் நடந்தால் 

கவிஞர் கே இனியவன்'s படம்

தனிமையை தவிர்க்க
உன்னிடம்
தனிமையாக்கிவிட்டாய்

நீ
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன்
இதயம் வலிக்கிறது

உன் காதல் பிரிவு
உலக காதலருக்கு
நல்ல போதனை
எனக்கு சாதனை

கஸல் ; காதலுடன் பேசுகிறேன் -தொடர் 19

கவிஞர் கே இனியவன்'s படம்

காதலின்
இதயக்கதவை
திறக்கும் சாவி
நீ

நீ சொல்ல வேண்டாம்
உன் முகம் சொல்லுகிறது
என்னை கொல்லப்போகிறாய்

நீ வந்த போதும்
சென்ற போதும்
வலிக்காமல் இருக்கும்
என் இதயம்

கஸல் ;தொடர் 18

கவிஞர் கே இனியவன்'s படம்

உன் இதயத்தில்
நான்
என்னை கொல்ல
மூச்சைநிறுத்து

நீ நடந்து
வந்த பாதை
எனக்கு கவிதையானது

உன் பெற்றோருக்கு
நான் வில்லன்
உனக்கு கதாநாயகன்
அதுபோதும்

கஸல் ;தொடர் 17

கவிஞர் கே இனியவன்'s படம்

என் இதயம்
திக்கு தெரியாத
காட்டில் அகப்பட்டுவிட்டது .

உன் உடைகளுக்கே
அழகு நீ அணிவதால் தான்

காதல் என்பது
பஞ்சும் நெருப்பும்
போராடும் போராட்டம் .

கஸல் ; தொடர் 16

கவிஞர் கே இனியவன்'s படம்

என் இதயம்
மாயானம் -நீ
எலும்புக்கூடு

உன் வாழ்க்கைக்காக
என் சந்தோசத்தை
பறித்தவள் நீ

நீ
துவாரம் உள்ள
தொட்டி தண்ணீர்
உன்னை ஏந்துவதற்காக
காதல் பிச்சை எடுக்கிறேன்

கஸல் ; தொடர் 15

கவிஞர் கே இனியவன்'s படம்

கவிதை
அன்னையின்
பாலிலிருந்து
வந்த வரிகள்

வா கண்ணே
கல் தோன்றா மண்
தோன்றா காலத்துக்கு
செல்வோம்

கவிதையின்
விமர்சனத்துக்கு
உன் இதயக்காயங்களில்
ஒழித்து வைக்கிறேன் ...!!!

கஸல் ; தொடர் 14

கவிஞர் கே இனியவன்'s படம்

நீ வெறும் இதழ்தான்
நான் விரும்புவது
பூவில் உள்ள தேனை

நான் நெருப்பு
நீ வெப்பம்

என் எல்லாவார்த்தைகளை
நீ கவிதையாக
உருவாக்குகிறாய்
சுகம் துக்கம்
இரண்டுக்கும் நடுவில் நீ

கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 13

கவிஞர் கே இனியவன்'s படம்

கண் மங்கியபின்
சூரிய நமஸ்காரம் போல்
என் இதயத்தில் உன்னை
வணங்குகிறேன்

காதல் கயிற்றை
சுருக்கு போடுகிறேன்
ஒன்றில் நீ அல்லது நான்

உன் கண்களில்
கண்ணீராகவேணும்
கறையவிடு.

கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 12

Pages