Haiku Kavithaigal, ஹைக்கூ கவிதைகள், குறுங்கவிதைகளை, துளிப்பாக்கள்
வறுமைக்காரன்
மன்னாஸ் இணிப்பகம்
அனைந்து அனைந்து எரியும்
மின் விளக்கு _ என்னை
வா... வா .... வென
அழைப்பது போல்
வேண்டாம் என்னை
அப்படி அழைக்காதே _ நான்
வறுமைக்காரன்.
இவன்
அ.கு.அன்பரசன்.
" கனவு "
காலம் முழுக்க
வயிற்றுப் பசி
கனவு கண்டேன்
அரசனாக.
காலையில் நீ என்னை பார்க்கும் நேரம் தான் -சூரிய உதயம் -அதுவரை இரவுதான்-என் மனசு ..!!!
நீ பூக்கள் என்ற அந்தஸ்தை பெற என்னை காதலி இல்லையேல் -நீ பெண்
எண்ணைக்குள் ஊற்றப்பட்ட தண்ணீர் போல் -நம் காதல்
கஸல் ; 101
நீலவான தேவதையே... நீல வானில் தோன்றிய .. வெண்ணிலா நீ ..
முகநூலை பார்த்தவுடன் .. நீலவானதேவதையே.. உன் நினைவுதான் ..
எத்தனை நண்பர்கள் முகநூலில் நட்சத்திரமாக இருந்தாலும் -விடி வெள்ளி நீ முகநூலை திறந்தால் நீ தான் முகம் மலர்வதை எப்படி சொல்வேன்
காலையில்
இல்லா வேகம்
மாலையில்...!
நாஞ்சில்
அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து -
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (05)
**********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ *********************************************** இறை உச்சரிப்பு இறை தெளிவு -இல்லா மறுபிறப்பு -
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (04) **********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ *********************************************** பற்றற்றவன் பற்றினால் -துன்பம் பூச்சியம் -
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (03) **********************************************
இனியின் திருக்குறள் -சென்ரியூ *********************************************** இறை சிந்தனை தொடர் சிந்தனை -நீடிய வாழ்வு -
கற்றதனால் ஆய பயன்என் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (02)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
இறைவன் தொழும் பக்தன் தொழும் -நல் கல்வி-
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01)
எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் -