aro...'s படம்

"பாழடைந்த கோட்டையை பழுது பார்த்தவர்கள்"


அங்கே...... என்ன விழாவா...?
மும்புரமாய்; முதற் சுற்று
பம்பரமாய்; ரொம்ப நேரமாய்
என்ன செய்கிறார்கள்....?

அடடே............
எட்டுகாலன்கள் எத்தன்னையோ பேர்
வாயாலே நூலெடுத்து; வாசமில்லா பூதொடுத்து
தொங்க விட்டார்கள் தோரணமாய்...
மூலைமுடுக்கெல்லாம் மாலைகளை...

எட்டிபார்த்த எலிகூட்டம்
புழுக்கையை கொட்டி;
புகைய விட்டு;
அழுக்கு கூடத்துக்கு
அத்தர் ஆக்கின...

பூத்த கருவேலஞ் செண்டுகள்

8.5
Your rating: None Average: 8.5 (2 votes)

rajudranjit's படம்

காத்திருப்பு!


மாற்றம்.........
வருமென எதிர்நோக்கி
காத்திருப்பு!

நேரம்..........
நல்லதென வர எதிர்நோக்கி
காத்திருப்பு!

வரவு...........
வந்தால் வாழ்வு சிறக்குமென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

காதலரை.............
காலம் சேர்க்குமென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

அன்னை...........
மீண்டும் மடி தருவாளென‌
எதிர்நோக்கி காத்திருப்பு!

இளமை.............
மீண்டும் புத்துணர்ச்சி பெற‌

5
Your rating: None Average: 5 (1 vote)

yarlpavanan's படம்

"கவிதை" என்பது வடமொழியா?


"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!

9
Your rating: None Average: 9 (1 vote)

aro...'s படம்

"பெண்"மாலை


அதோ...........
அந்த சூரிய பெண்
காரிருள் கணவனை
தழுவ போவதை எண்ணி
வெட்க பூ பூத்துவிட்டால்;
வான வனாந்திரமும்
சிவப்பை உடுத்தி
உவகை கூட்டியது;

நாள் முழுவதும் உலாவியவள்
நாயகனை குலாவுவதை எண்ணி
வெட்க பூ பூத்த நேரத்தில்
தென்றலது வடை காற்றாய்
அவள் ஆடை தொட‌
அணைக்க முடியா அத்தீ
அவனை அணைக்க‌ வளைந்ததால்
குறுகி அத்தீ "அந்தீ"யானதோ.......?!!

அவளின் அணைப்பில்; ஆனந்தத்தில்

8.16667
Your rating: None Average: 8.2 (6 votes)

rajudranjit's படம்

ஆடியின் முன்!


ஆடி முன் நின்றே வடிவது நோக்க‌
வடிவது காட்டும் ஆடி உன் கண்ணில்
படிவதுன் மனத்தின் எண்ணம் பிரதிபலிக்க‌

பாடியாடி விளையாட்டு காட்டுவதுன்னியல்பு
கூடி நிற்கும் கூட்டத்திற்கு நீ கூத்தாடி
காற்றடிக்க கடல் சீறும் கலமது ஆட‌

இடியிடிக்க மின்னல்வரும் ஒலி பின்பே
முடிகட்டி மன்னனெனவாகினும் ஆடிக்காட்டும்
பிடி சோற்றுக்கேங்கும் பரதேசியெனினும்

மிக்கதொரு மகிழ்ச்சியென மன்னன் காண‌

6.6
Your rating: None Average: 6.6 (5 votes)

Ponvannan's படம்

என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பேன்


என் எழுத்தினால் ஒருவர் அமைதி கொண்டால்
என் எழுத்தினால் ஒருவர் மனம் திருந்தினால்
நான் எழுதிக் கொண்டே இருப்பேன்

என் சொல்லினால் ஒருவர் மனம் மகிழ்ந்தால்
என் சொல்லினால் ஒருவர் வெற்றி பெற்றால்
நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்

என் பாட்டிலே ஒருவர் மனம் உருகினால்
என் பாட்டினால் ஒருவர் உண்மை அறிந்தால்
நான் பாடிக் கொண்டே இருப்பேன்

என் அறிவுரையால் ஒருவர் வாழ்வு சிறப்படைந்தால்

7.66667
Your rating: None Average: 7.7 (3 votes)

rajudranjit's படம்

என் மனைவியின் கவிதை!


இனிய தமிழ் நண்பர்களே! எனது துணைவியார் மகேஷ்வரி அவர்களின் விருப்பத்திற்காக, எனது துணைவியார் அவர்களின் கவிதையை இப்பகுதியில் பதிந்துள்ளேன்!

தாயின் வயிற்றில்
சந்தோஷமாகயிருந்தேன்!

இந்தவுலகத்திற்கு வந்தது
தெரிந்தபோதும் சந்தோஷமாக‌யிருந்தேன்!

அகவை ஒன்பதில் தந்தையிழந்தேன்
அது என் முதல் சோகம்!

அகவை இருபத்தி ஐந்திலே பிரிந்தேன்
பெற்றவளை விட்டு வெகுதூரம்!

அச்சோகத்தையும் என் அறிவு

6.25
Your rating: None Average: 6.3 (4 votes)

rajudranjit's படம்

இல்லமொரு கோவில்!


இல்லம் என்பது வெல்லம்
அதுவொரு இனிமையே
சுவைப்பவரறிவார்!

தன் மனம் ஒன்றிய துணை
மனைவியென இணந்து செயல்பட‌
இல்லம் வெல்லும் புகழ்!

மக்கள் செல்வம் மதிப்பறிய‌
மகிழ்ச்சியென பொங்கும் குதூகலம்
ஈடில்லை இல்லத்தின் வாழ்வு!

உற்றம் சுற்றம் உறவுகள்
குற்றம் காணா குணங்களிருந்தால்
உலகிலின்பம் அதுவொரு சுகம்!

அண்ணன் தம்பி அன்புடன்
அரவணைத்துச் செல்ல வாழ்க்கை
அசைக்கயியலா மலையெனவாகும்!

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

rajudranjit's படம்

இயற்கைக்கு உதவு!


இயற்கை சிரிக்க‌
மனிதன் செய்தது
என்ன?

மனிதன் மகிழ‌
இயற்கை தருகின்றது
ஏராளம்!

மனிதன் வாழ்வு
மறையும் காலம்
அதனளவு!

மனிதன் மாற்றம்
இயற்கை சிரிக்க‌
அவமானம்!

பிறக்கும் குழந்தை
வளரும் மனிதன்
முன்னேற்றம்!

இதை விட்டு
மனிதா நீ அறிந்தது
என்ன?

உன்னை காக்கும் இயற்கை
உன்னையுமறியாமல் உண்மை
நீ அறிவாயோ!

நீ பிளக்கும் பூமி
அழிக்கும் காடுகள்
பொருக்கும் இயற்கை!

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

rajudranjit's படம்

வேற்றுமை அழி!


ஏனிந்தக் கொடுமையெனத் தனிமை
அது தனிய மடமையென எண்ணங்கள்
இனிமையான தருணங்கள் அசைபோட!

வளமையான வாழ்வது வெளிச்சம் காட்ட‌
எளிமையாக தொடக்கங்கள் சபையேற‌
புதுமையாக செய்திட செயல் கூடுமே

இடம் வலம் மாறி ஒரு சுற்று சுற்ற‌
அதுவொரு சுழற்சியாய் மாறிடவே
நலமென அறிவோம் அதனில் தீமை மாற!

அலைகின்ற பேரென மனிதர்களில் சிலர்
இருக்கின்ற சுகம் மறந்தே தேடுகின்றார்
உன்னிடம் இல்லாத ஒன்று எதுவென சொல்!

5
Your rating: None Average: 5 (2 votes)




Syndicate உள்ளடக்கம்