BaluGuruswamy's படம்

"இறைநெறி"


"இறைநெறி"

விற்பனைக்காக
சந்தையில் குவிந்த
சரக்குகளே போல்,
சொற்பவிலையில்,
அளவிலாத தீமையும்,
அவ்வப்போது அத்தி பூத்தாற்போல்
ஒருசில நல்லவையும்,
சிந்தையின் பரப்பெல்லாம்
நிரப்பிக்கொண்டிருகின்றன.
தீமையோ,
துரித வேகத்தில்
துடிப்புடன் காரியமாற்றின.
நற்றவம் புரிவதேபோல்,
நல்லவையோ, நாட்கணக்கில்,
ஒன்றும் செய்யாமல்
ஓரத்தில் இருந்தன.
"இறைநெறி" என்ற ஒன்றை
இவற்றின் இடையே கொணர்ந்தேன்.

6
Your rating: None Average: 6 (2 votes)

Ponvannan's படம்

முருகனை நினை மனமே


(இன்று தைப்பூசத் திருநாள். இவ்வேளையில் என் மறைந்த தந்தையார் திரு வி.பி. பழனியாண்டி ஆசிரியர் அவர்கள் முருகன் மீது எழுதிய ஒரு பாடலை இங்கே சமர்ப்பிக்கின்றேன்)

முருகனை நினை மனமே
நன்மேன்மையுற தினமே
மோகன சிங்காரவடி
வேலணியும் மேலோனான
முருகனை நினை மனமே
நன்மேன்மையுற தினமே

குன்றுதோறும் நின்றாடுவான்
குறக் கோதையை மனம் நாடுவான்
கோகிலம் நிகர்த்த மொழி
குஞ்சரியாள் கொஞ்சும் எழில்

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)

Ponvannan's படம்

தமிழ்க் கவிதை நாயகனாய் வருவாய்


குப்பாச வாழ்க்கை குலைந்து விழ வேண்டும்
அப்பாநின் அருளை நினைந்து பெற வேண்டும்
தப்பாமல் தவறாமல் உனதடியில் வீழ்ந்தே
எப்போதும் உன்கருணை நிழலில் வாழவேண்டும்

அய்யோ என அலறி ஆருயிரை விடுமுன்னே
பொய்யான இவ்வாழ்க்கை பொருளுணர்த்தி ஆங்கு
அய்யா உன்பதத்தை இறுகவே நான் பற்றி
மெய்யாலும் மனமுருகி மகிழ்ந்திடவே வருவாய்.

எந்நாளும் உனையன்றி யாரையும் நான் வாழ்த்திலனே
உந்நாமம் என்நாவில் எப்பொழுதும் நடனமிட

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)

rajudranjit's படம்

அஃதவன் அருள்!


அன்பின் உருவமே பண்பின் செழுமையே
ஆனைமுகத்தானே கந்தனுக்கு மூத்தோனே!

இல்லம் வளம் பெறவே தொழுதிடுவோம்
ஈசன் தலைமகனை போற்றிடுவோம்!

உலகின் முதல்வனை உத்தம புதல்வனை

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

rajudranjit's படம்

கடவுள் உண்டு!


எல்லாம் அவன் செயலன்றோ
நாமறிய ஒன்றுமில்லை என்றே
நல்லதை மறந்தோம் அவன் பெயரால்

பொல்லாதார் பாவமொழிக்க பாடுபட‌
கல்லாதார் காயம் பலவாகிப்பெருகி
நில்லாத வாழ்வினில் சீர்பெற எண்ணுகின்றார்

7
Your rating: None Average: 7 (3 votes)

Ponvannan's படம்

மனமென்னும் கோவிலிலே


மனமென்னும் கோவிலிலே
மணிமகுடம் தரித்தவளே
மதிவிளங்க முறை செய்தே
மதிப்பளித்த மன்பதையே
மறைகளெல்லாம் புகழ்ந்துரைக்க
மறை பொருளாய் நின்றவளே
மழை வழங்கும் முகில்போலே

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

Ponvannan's படம்

இறைவனை அடைய


மனமே கேள்....

அன்பேதான் சிவமாகும்
ஆன்மாவே உயிரொளியாம்
இல்லறமே நல்லறமாம்
ஈசனடியே நிரந்தரமாம்

உள்ளமதைத் திறந்திடுவாய்
ஊனுடம்பை மறந்திடுவாய்
எல்லாமே அவன்செயல்தான்
ஏன் பிறந்தோம் என்றறிவாய்

7
Your rating: None Average: 7 (2 votes)

Ponvannan's படம்

சித்தி தரும் சீலம் தரும் சிவமயமே தரும்


சித்தி தரும் சீலம்தரும் சிவமயமே தரும்
புத்தி தரும் புலமை தரும் புகழனைத்தும் தரும்
தத்திவரும் தவழ்ந்து வரும் தமிழழகைத் தரும்
பக்தி வரும் பிணித்து வரும் பழவினைகள் அறும்

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

Ponvannan's படம்

பரிதவிக்கும் உள்ளத்திற்கு உரித்தான உறவே


பரிதவிக்கும் உள்ளத்திற்கு உரித்தான உறவே

கரிநிறத்து மழைமேகம் புவனமெல்லாம் பொழிந்து
தரித்திரமே பறந்தோட கான்மலைகள் செழிக்க
உரித்தநிலை உருமாறி உயிர்களெல்லாம் சிறக்க

8
Your rating: None Average: 8 (3 votes)

Ponvannan's படம்

துதிபாடும் நெஞ்சம்


துதிபாடும் நெஞ்சம்

துதிபாடும் நெஞ்சம் கொண்டாரிடம் என்றும்
நதிபாயும் வெள்ளம் தனைப் போல பொங்கும்
நிதியாவும் நிறைத்து வறுமைத் தளை நீக்கி
மதியாவும் மகிழவே வருவாயடி அம்பிகையே

8.66667
Your rating: None Average: 8.7 (3 votes)




Syndicate உள்ளடக்கம்