அன்பு கவிதைகள், Anbu kavithaigal
தாயன்புக்கு ஈடு இணை இல்லை
உண்மைதான்..
இந்த புகைப்படம் சொல்கிறது..!
உன் நினைவுகளே வேண்டாமென்று
கிழித்தெறிந்தேன் குப்பைத்தொட்டியில்
அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு
நடுவில் வந்தமர்ந்து சிரிக்கிறாய்
முட்களுக்குள் ருசிக்கின்ற பலா போல ரணங்களுக்குள்ளும்
வருடும் இதம் தருகிறாய்
தமிழில் இல்லாத வார்த்தைக்கு
பொருள் தேடுகிறாய்
உயிர் இல்லாத சிலைக்கு
உணர்வுகளை பரிச்சிக்கிறாய்
"காத்திருப்பு எதற்கு"
"நினைவை நேசித்தேன் உன் விழியில் காத்திருப்பதில் ஓர் சுகம்
வருட கணக்கில் காத்திருக்கும் இதயம் நான்
உன் வார்த்தைகாக காத்திருந்த நான் உன்மையாக காத்திருக்கும் என் இதயம் !!
வலியுடன் உறங்காமல் காத்திருக்கும் உன் இமை! எதற்கு இந்த காதல் வேதனை!!
காதல் இருந்தும் மறைப்பதில் என்ன சந்தோசம் உனக்கு சொல் காதலியே!!
காதல் என்பது நொடியில் பூத்து நிமிடத்தில் முடிவது அல்ல ! காதல் என்பது ஒரு உணர்வு !!
இது காதலிப்பவர்களுக்கு தான் புரியும்
நீ எப்பவும் பேசுவாயே மௌன வார்த்தையில் கலங்காத நீர் போல்
திரும்பிப்பார்க்கிறேன் .... முப்பது வருடங்க்களின் ... புள்ளிப்புள்ளியாய் நிறைய .. சின்ன சின்ன நினைவுகள் ... பாடசாலை இடைவேளையில் .. பக்கத்து வீட்டு மாமரம் ... படாத பாடு படும் ... பூ பிஞ்சு காய் என்று பாராமல் .. எல்லாம் கீழே விழும் ... மாமரத்துக்கு வாயிருந்தால் .. கண்டபடி பேசியிருக்கும் ...
எம்மைக் கண்டால்... அணில்களும் சாபமிடும் .. அதுகளின் உணவிலும் ... கைவைத்தவர்கள் நாங்கள் ....
என் குழந்தையின் ஓவியம் ....
சோகமே உனக்கு எப்போது ... சோகம் வரும் சோகத்தை -நீ உணர .....!!!
தீயே நீ எப்போது ... சூட்டை அறிவாய் ... சூட்டின் வேதனையை-நீ உணர ......!!!
காதலே நீ எப்போது .. காதலை அறியாய் ... என் காதலி தரும் வலியை .. உணர .......!!!
இப்போது விளங்குகிறதா ...??? உணர்வு வேறு நிகழ்வு வேறுகண்ணே.... உன்னை உணர்வாக நினைக்கும் போது ... சில உவமைகளையும் ... உன்னை நிகழ்வாக நினைக்கும் போது ... சில உவமைகளையும் ... பயன் படுத்துகிறேன் கண்ணே... உன்னை கவர ..!!!
சுவரில் கிறுக்காதே .... விளையாடும் குழந்தைகளின் ... தாயின்- தடித்த வார்த்தை ..!!!
கிறுக்கட்டும் விட்டுவிடு ..... தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!
பல ஆயிரம் கொடுத்து ... வர்ணம்பூசிய சுவர் -அவளின் ... ஏக்கவார்த்தை...!!!
உனக்கு தெரியுமா ....??? இன்று நவீன சித்திரம் என்று ... கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...
யார் கண்டது கண்ணே ... எதிர்காலத்தில் நவீன ஓவியன் ... நம்வீட்டில்.....??? நம்பிக்கை வார்த்தை ...!!!
சுதந்திரத்தை பற்றி ... கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ... முற்றத்தில் வந்து விழுந்த்தது ... காகங்களால் கொத்தப்பட்ட ... குருவியொன்று ....!!!
எடுத்த குருவியை ... மெதுவாக வருடி ... முடிந்தளவு பாதுகாத்து ... பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ... வேண்டாமப்பா ..நிறுத்துங்க .. அதை கூட்டில் வளர்ப்போம் .. தடுத்தான் செல்ல மகன் ...!!!
வேண்டாம் மகனே ... அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது .. பறக்க விட்டேன் குருவியை ..!!!
நான் திரிந்த பாதை ... நான் ரசித்த பாதை ... அழகான இருபுறமும் ... அடர்ந்த மரங்கள் ... கணவன் மனைவிபோல் ... உயரமான குட்டையான அருகருகே .. மரங்கள் ..காற்றடித்தால் ஒன்றை ஒன்று ..
உரசும் ஊடல் ...!!!
தரையில் வண்ண வண்ண பூச்சிகள் .. இசைக்கச்சேரி நடார்த்தும் குருவிகள் ... சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகை ..
இப்போ ....!!!
இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் ... ஒரே நிறத்தில் அசையாத பிணம்போல் ... ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???