304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
பூட்டியிருக்கிறது கதவு
ஓயாமல் தட்டுகிற
காற்றுக்குத் தெரிய வில்லை
வீட்டார்ஊர் திரும்பும் தேதி.
சின்னப் பிள்ளையின்
பள்ளிப் பையில் ஒளிந்திருக்கிறது
படிக்கவே அவசியமில்லாதகாற்று.
வாகனங்களுக்கு அடியில்
நசுங்குகிற காற்றைப் பற்றி
என்றேனும் யோசித்ததுண்டா?
தீர்வு தெரியாமல் நான்
முகங்கவிழ்த்துத் திரும்பிப் போகிறேன்
அப்போதெல்லாம்.
கலவரப் பகுதிகள் நடுவே
காற்று மட்டும்பயமற்று.
பூமிக்குள் ஒரு போதும்
புதைவதில்லை காற்று...
உள்ளங்கைக்குள் மட்டும்
அடங்குகிறது அன்பில் !
நேசிக்கத் தெரியாத
மனிதரைக் கண்டால்
காற்றுக்குக் கூட என்னமாய்
கோபம் வருகிறது
புழுதி வாரித் தூற்றுகிறது.
நிறைவேறாத என்
ஒவ்வொரு கனவையும்
காற்று சுமக்கிறது
பெருமூச்சாய் !
அத்தனை மொழிகளையும்
தன்னில் சுமக்கிற காற்றுக்குத்
தாய் பாஷை
மௌனம்
வாயேன்..
ஒரு தரமாவது
ஆற்றங்கரை மணலில் நின்று
காற்றை விசாரிப்போம்.
என்னைப் போல
உன்னைப் போல
அதற்கும் வேண்டியிருக்கிறதுசிநேகம்!
நன்றி : ரிஷபன் (http://rishaban57.blogspot.com/)
வித்தியாசமான சிந்தனைகள்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
