பெண்
கருகருத்த முகத்தில
நெறுநெறுத்த தாடியை
விறுவிறுன்னு
எடுத்தது ஏனைய்யா
ஆண்
கதிரறுக்கும் பொம்பளை
கன்னத்தில குத்துமே
கருத்தமுடி
எனக்கு ஏனம்மா
பெண்
நெஞ்சிமேல பச்சையை
ரத்தம் வடிய குத்தியே
பெயரெழுதி
வைச்சது ஏனைய்யா
ஆண்
வாய் செவத்த பொம்பளை
வாழ்க்கை முட்டும் வேணும்ன்னு
வாசிக்கத்தான் எழுதிவைச்சேமா
பெண்
வரப்புமேட்டு ஓரமா
வாங்கிவந்த ரொட்டியை
மறைச்சி வச்சி
முழிப்பது ஏனய்யா
ஆண்
தண்டைச்சத்தம் கேட்காம
தனியாநீ வந்தால்
தந்து
ரசிச்சி பார்க்கத்தானம்மா
பெண்
ரொட்டி எதுவும் வேணாங்கையா
பட்டுசேலையும் வேணாமைய்யா
உன் கெட்டியான கைகளால
கட்டவேணும் தாலிகயிரைய்யா
ஆண்
போட்டிருக்கேன் கழனியில
வெளையட்டும் கரும்பு மெள்ள
கொட்டிடுவோம் கெட்டிமேளம்தான்
உனக்கு கட்ட வாரேன்
தங்கத்தாலிதான்
பெண்
கரும்ப சொல்லி குத்தமில்ல
கரண்டுவர வேணுமில்ல
தண்ணியில்லாம
கரும்பு வெளையுமா
நம்ம கனவு
எல்லாம் நெசமா மாறுமா
கருத்துகள்
அருமையாக உள்ளது
அருமையாக உள்ளது 
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்






