syedali's படம்

கனவுகளே .....

இரவின் கனவுகளில்
விழிகள்கண்ட நிழல்களின்
நிஜங்களைத் தேடிய
வாழ்க்கை பயணத்தில்
காயங்களோடு திரும்பியது
மதியும் மனமும்
விழிகளோடு கோபம்வேண்டாம்
வருகையைத் தொடருங்கள்
காயங்கள் ஆறியபின்
சூரியனை நோக்கி
மீண்டும் பறக்கும்
பீனிக்ஸ் பறவையைப்போல்
எனது பயணமும்
தொடரும்.......

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

rajudranjit's படம்

அன்பரே நன்று!


4

அன்பரே நன்று! ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை அதில் உமது திறமை பராட்டுக்குறியது! எழுதுங்கள்! உமது கற்பனை குதிரையில் சவாரி செய்து கொண்டு!

syedali's படம்

சென்ற காலங்களில் என்


சென்ற காலங்களில் என் கனவுகளைத்தேடிய பயணத்தில் தோல்வியைத் தழுவி காயப்பட்டு திரும்பிய என் மனம் அன்று கிறுக்கிய பழைய வரிகள்

புனைவுகளை ரசிக்கும் மனங்கள் நிஜங்களை ரசிக்க சில தருணங்களில் மறந்து விடுகிறார்கள்

என் உணர்வுகளை பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....