உறக்கம் கலைத்தான் கதிரவன்
இரவு விழித்த களைப்பில்
உறங்கச் சென்றது நிலவு
மெல்ல விழிதிறந்தான் கதிரவன்
இளஞ் சூட்டிற்கு இரையானது
புற்களில் உறங்கிய பனித்துளிகள்
இளஞ்சூடு தட்டி எழுப்ப
உறக்க சோம்பலை களைந்து
விருட்டெழுந்தது மரமும் செடிகளும்
கொக்கரகோ கொக்கரக்கோ ....
கதிரவன் எழுந்து வருகிறான்
ஊரை எழுப்பியது சேவல்கோழி
குஞ்சுகளின் அன்றைய உணவிற்காக
கூட்டிலிருந்து இறகை விரித்து
புறப்பட்டது தாய்ப் பறவைகள்
உறங்கும் வீட்டை உணர்த்துகிறது
சன்னல் கதவு இடுக்குகளில்
ஊடுருவி நுழைந்த வெளிச்சம்
நல்லா விடிந்து விட்டது
எண்ண உறக்கம் வேண்டியிருக்கு
பிள்ளைகளை எழுப்பும் அம்மா
காலையிலேயே சுளீர்ன்னு வெயில்
எங்கோ பயணம் போவதற்காக
வீட்டில் இருந்து புறப்படுபவர்
ஈரத்தை களவு கொடுத்து
கொடியில் புன்னகை செய்கிறது
உலர்ந்த உடுதுணிகள்
மார்பில் கொதிக்கும் அனல்
கதிரவன் மேல் கோபம்
வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி
நீண்ட தார் சாலையில்
அங்காங்கே தேங்கி நிற்கிற்கும்
கானல் நீர்த் துளிகள்
வறண்டு தொண்டயுமாய்
தண்ணீரின் அடையாளம் தேடி
வீதியில் துவளும் பாதகாணிகள்
இங்கே வந்து அமருங்கள்
மடியில் நிழலை விரித்து
வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள்
உழைக்காத மனிதர்களுக்கும்
உடலில் இருந்து உதிர்கிறது
வியர்வைத் துளிகள்
கருணை அற்ற கதிரவன்
மார்பு வெடித்து பரிதபமாய்
நீர் வற்றிய குளம்
சிதறிவிழும் அனல் வேட்கை
நட்டு நடு உச்சியில்
பூமியை முறைத்தபடி கதிரவன்
(3 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/08/blog-post_21.html
கருத்துகள்
இங்கே வந்து அமருங்கள்
Submitted by vinoth on திங்கள், 22/08/2011 - 1:24pm.
இங்கே வந்து அமருங்கள்
மடியில் நிழலை விரித்து
வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள்
மார்பில் கொதிக்கும் அனல்
கதிரவன் மேல் கோபம்
வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி
கருணை அற்ற கதிரவன்
மார்பு வெடித்து பரிதபமாய்
நீர் வற்றிய குளம்
இந்த கற்பனைகள் நன்றாக உள்ளன.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சிறந்த எண்ணங்கள்
Submitted by yarlpavanan on திங்கள், 22/08/2011 - 10:13pm.
சிறந்த எண்ணங்கள்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










