கையில் பூவுடன் காத்திருந்த
தருணங்கள் தகிக்கின்றன;
கடல் கரையில் கழித்த
கடலையோடு விளையாடிய
விடலை பருவம்
வேதனையை வேகபடுத்துகின்றன;
படகு மறைவு படர்ந்த இருள்
பரிசங்கள் பதிதமுத்தங்கள்
பாவியென்னை பாடாய் படுத்துகின்றன
அலையோடு விளையாடிய
அந்திமாலை பொழுதுகள்
அழுகையை அதிக படுத்துகின்றன..
திரையரங்க இருட்டே தரைசீலையாக
திரும்ப திரும்ப முத்தமிட்ட
திடிரென கடித்துவிட்ட
பொழுதுகள் பொசுக்குகின்றன;
பேருந்து நிறுத்தங்களில்
பேசிய பேச்சுக்கள்
வீசிய வாசங்கள்
எல்லாமே வருத்துகிறன
தனியாக வரும்
என்னை பார்த்து
இளிக்கின்றன.......
பூ நாரோடு போனபின்
பூஞ்செடி காஞ்சி போனதே.......!
ஏமாற்றி போனவளே.......!
கனவில் கண்ணில்
கத்தி வைக்காதடி...........!
காலில் வேண்டுமாணாலும் விழுகிறேன்
வேண்டாம் போய்விடு.........
சும்மாகூட முடியவில்லை
உன்னை மறக்க
சுருக்கு மாட்ட துணிந்துவிட்டேன்......
இப்போது எப்படி வஞ்சிக்க திட்டமிட்டாயோ.....?
தூக்கில் தொங்கவும் முடியவில்லை
சுருக்குக்கு குறுக்காக
தெரிகிறதே........ உன் முகம்.....

கருத்துகள்
(No subject)

----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை
web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com
..
வரிகளிலேயே காதலின் வேதனை
வரிகளிலேயே காதலின் வேதனை புரிகிறது..

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
யதார்த்தமான வரிகளில்
யதார்த்தமான வரிகளில் சொக்கவைக்கிறீர் உமது கவிதையின் ரசிகன் நான்...........

(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
கிறுக்கள் அல்ல...
கிறுக்கள் அல்ல...

$கேத்தரின்$
கிறுக்கனின்
கிறுக்கனின் கிறுக்கல்கள்....
வரிகள் ஓவ்வொன்றும் வேதனையை சொல்கிறது... அருமை...நண்பா.
நட்புடன்
குமார்
realy fantastic kavithai
realy fantastic kavithai frnd! 
பாஸ் கவிதை ரொம்ப
பாஸ் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு .
உ.சரவணன்
திருநெல்வேலி
nanraaaka ullathu
nanraaaka ullathu vaalththukal
v.m.j.gowsi





























