ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்
அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்
வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது
வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது
வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை
நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்
அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
(2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/10/blog-post_06.html
கருத்துகள்
நல்ல கருத்து
Submitted by yarlpavanan on வெள்ளி, 07/10/2011 - 9:50pm.
நல்ல கருத்து
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










