எண்ணத் தேனீக்கள் சேர்க்கும் அடைமனத்தில் உண்ணும் தேன் நன்றோ! கண்ணும் காதும் நேரடித் தொடர்பில் விண்ட மூளை நன்றோ? கையும் காலும் செய்யும் செயலில் ஐயம் கொள்ளுதல் நன்றோ? உடலும் மனமும் இணைந்த வாழ்வில் தடையம் உடைதல் நன்றோ? வாழும் நாளில் கழிந்தது போக[கழிந்தது போக-உண்ணல்,உறங்கல் போன்ற சுயத் தேவை நேரங்கள் கழித்து] வாழ்நாள் தாழ்தல் நன்றோ? ஆண்டுகள் நூறு வாழ்தல் எனில் ஆண்டது நாறுதல் நன்றோ? [ஆண்டது-செயல்படும் காலங்கள்] [நாறுதல்-கெட்ட நாற்றம்] நன்மை தீமையும் உணரும் தன்மையில் நன்மை நழுவுதல் நன்றோ? பிறப்பில் நிறை வளர்வில் நிறை இறப்பில் குறை நன்றோ? உண்டது கண்டது அண்டியது கொண்டது விண்டது தண்டம் நன்றோ? பிறப்பது பலர்! விதைப்பது சிலரே! பிறப்பிதை சிதைப்பது நன்றோ? பலர்போலப் பிறந்து இறப்பவன் அல்லன் சிலர்போல விதைத்தவன் நன்றே! விதித்தவன் நீ! விதைத்தவன் நீ! விதிப்பயன் நீ! விதியே எழுந்திடு![எழுதிடு] தன்னம்பிக்கை கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 255 views கருத்துகள் நன்றாக உள்ளது :clap: நன்றாக உள்ளது Log in to post comments மிக நன்று மிக நன்று தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!! Log in to post comments Log in to post comments அருமை விதித்தவன் நீ அருமை விதித்தவன் நீ விதைத்தவன் நீ என்றால் அனைத்தும் நாமாக ஆகிவிடாதா வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments விதித் தவத்தால் விதித்தவன் விதித் தவத்தால் விதித்தவன் விதைத்தவன் ஆகின்றான். Log in to post comments
அருமை விதித்தவன் நீ அருமை விதித்தவன் நீ விதைத்தவன் நீ என்றால் அனைத்தும் நாமாக ஆகிவிடாதா வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162