நகருக்கு
ஒதுக்குபுறத்தில் அலுவலகம்
அதன் சிறு தூரத்தில்
தங்கும் சிறு விடுதி
அன்று
முதல்நாள் பட்ட பகலிலும்
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது
மூனேமுக்கால் சுவருகளும் கதவும்
அன்றைய இரவில்
தனித்து உறங்க முயற்ச்சித்து
பயத்தில் அயர்ந்து தூங்கினேன்
நன்றாய் விடிந்த பிறகு
சில
நாட்களின் ஓட்டத்தில்
நல்ல நண்பர்களாய் இணைந்தோம்
தொடர்கிறது இன்றுவரையிலும்
உன்சுவற்றை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை
நான்
சிந்திய புன்னகையும் கண்ணீரையும்
உன் சுவற்று இடுக்குகளில்
ஒழித்து வைத்து இருக்கிறாய்
என்
நன்மை தீமை செய்கைகளை
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய்
அதற்கு நீயே சாட்சியானாய்
விடுமுறைகளில்
விடியலில் வெளியே சென்றாலும்
இரவினில் தலையசைக்க
உன்மடியை நாடிவருகிறேன்
என்
உணர்வுகளை உணர்ந்த
பந்த உறவுகளின் வரிசையில்
நீயும் ஓர் உறவு
இது
காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்
உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/12/blog-post_29.html






