nandhalala's படம்

எங்கும் எதிலும்
பரவி இது இல்லாதது
ஒன்றுமற்றது என்று
சொல்லும்படி எங்கும்
கலந்தது வர்ணங்கள்
எண்ணங்களும் கூட
வண்ணங்கள் பூசியே
வெளிபடுகின்றன ..
படைத்தவன் தூரிகை
எத்தனை கவித்துவமானது
என்பதை மலை முகடுகளும்
பள்ளத்தாக்குகளும்
என்றும் நிறங்களில் சிரிக்கும்
பூக்களும் கதை கதையாய் சொல்லும்!
முதல் முறை பிறந்த வண்ணம்
எதுவென்று யோசித்தேன் ?
யாரேனும் தெரிந்தால்
பதில் சொல்லுங்கள்

www.nandhalala.com

0
Your rating: None