"மறந்து விடு" என்றவள்..,
திரும்ப வந்தாள்
"திருமணம்" மறக்காமல்
வந்து விடு என்று..!!
**********************************
நீ.......
"தேவதையாய்" வளர்ந்தும்
என்ன புண்ணியம்..?
முத்தமென்றதும்
கஞ்சத்தனம்..!!
***********************************
உன்
"அழகு பறவைகளை"
எப்படி சிறை பிடித்தாய்
இந்த
சிறு தாவணியில்..?
************************************
இரண்டு மருத்துவர்கள்...
வந்தார்கள்..
பார்த்தார்கள்...
சென்றார்கள்..
கண்டுபிடிக்க முடியவில்லை
"காதல் சுகநோயை..?"
**********************************
குறும்செய்தி வராத போது
குறும்பி...
உன் நினைவு வராத நேரம்
என்ற அர்த்தம் அல்ல...?!
அதேபோல் குறும்செய்தியாக
"கவிதை" வந்தால்..
உன் நினைவு
"ராவண சிநேகம்"
போல பத்து மடங்கு பெருகி விட்டதென்று
அர்த்தம்...!!
கருத்துகள்
நீ....... "தேவதையாய்"
நீ.......
"தேவதையாய்" வளர்ந்தும்
என்ன புண்ணியம்..?
முத்தமென்றதும்
கஞ்சத்தனம்..!!

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
குறும்செய்தி வராத
குறும்செய்தி வராத போது
குறும்பி...
உன் நினைவு வராத நேரம்
என்ற அர்த்தம் அல்ல...?!
நல்ல காதல் கவிதை...
குட் நன்பா.....
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"









