எல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை
இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற
கால்கள் மட்டும்
பாதை தேடி களைத்தே யோயும்
முகமுரசிச் செல்லும் சிநேகப்புன்னகைகள்
அந்நிய தேசம் மறக்கச்செய்யும்
தலைக்குனிந்த தெருவிளக்கின் மௌனஞ்சலி
என் பயணத்தின் இரவுத்தோழர்கள்
வெண்பனி படரும் தலைமயிர் உதறி
மேலும் நடக்கின்றேன்
பிணங்கள் உலவும் நமதூர் நேரம்
நடைப்பிணங்கள் ஏராளம்
கனவுப்பையை முதுகிற் சுமந்து
தொடரும் பயணம்
எடை கூடுமென் கனவுப்பையும்
கலையாக்கனவுகளும் வளர்நிலவாய்...
(4 votes)
கருத்துகள்
அழகான கவிதை தோழரே....
Submitted by syedali on வியாழன், 16/09/2010 - 11:46am.
அழகான கவிதை தோழரே....
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
என்னே..கவிதை.........என்னே..க
Submitted by aro... on வெள்ளி, 24/09/2010 - 3:13pm.
என்னே..கவிதை.........என்னே..கவிதை......... மிகவும் அருமையாக உள்ளது.... 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்








