vinoth's படம்

மொழியற்ற வேண்டுதல்!
====================================

அது ஒரு அந்திசாயும் பொழுது
ஆள் அரவமற்ற கோவில் சன்னதி

ஆரோ ஒருவன் ஆள்விரல் நீட்டிநீட்டி
ஆணவமாய் பேசிக் கொண்டிருந்தான்
கோவில் கற்சிலை முன்னே!

முகம் மட்டும் தெளிவாகத் தெரிய
அமைதி அழுகை ஆத்திரம்
ஏக்கம் ஏளனம் ஏதோ எதிர்பார்ப்பு
அனைத்து உணர்ச்சிகளும்
உரிமையுடன் கொப்பளிக்கப் பார்க்கிறேன்

பே... பெபே... பேபெ... பே...
பே... பெபே... பேபெ... பே...

அவன் கத்தல் அனைவருக்கும் கேட்கிறது
அவனையும் சிலையையும் தவிர!

யாருக்கும் புரியாத மொழியா அது?
கருணை உள்ளங்களும் இறைவனும் மட்டும்
புரிந்து கொண்ட மொழி அது!

அவனிற்கான என் வேண்டுதலில் யாதொரு
அர்த்தமு மில்லையென உணர்ந்தேன்.
அவன் ஏதோ சொல்ல முயற்சிக்கவில்லை;
அவன் ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருக்கிறான்!

வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

6
Your rating: None Average: 6 (4 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

"யாருக்கும் புரியாத மொழியா


7

"யாருக்கும் புரியாத மொழியா அது?
கருணை உள்ளங்களும் இறைவனும் மட்டும்
புரிந்து கொண்ட மொழி அது!" என்ற வரிகள்
எனக்குப் பிடித்திருக்கிறது.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நன்றி ஐயா


நன்றி ஐயா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

அவன் ஏதோ சொல்ல


5

அவன் ஏதோ சொல்ல முயற்சிக்கவில்லை;
அவன் ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருக்கிறான்!

ஆழமான சிந்தனை!

vinoth's படம்

நன்றிங்க


நன்றிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Karthikn1987's படம்

அருமை அருமை அருமை


8

அருமை அருமை அருமை Clap

vinoth's படம்

நன்றிங்க


நன்றிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...