syedali's படம்

நிசப்தங்களை கிழித்துக் கொண்டு 
இருளின் காதை அடைக்கிறது 
அந்த முனங்கல் சத்தம் 

விசை அசைவுப் புணர்வில் 
தத்தம் உணர்ச்சிகளை கொட்டும் 
ஆயத்தத்தில் இரு பாலினங்கள் 

முனங்கலில் வழியும் போதை 
சுயத்தை நனைத்து நீத்திட 
விசைவில் நகரும் பொம்மையாய் மதி 

நாளத்தில் ஊருடுவி கலந்தது 
சலனங்களற்ற நிசப்த இரவில் 
காதில் ஓதப்பட்ட மந்திரம்

தொப்புள்கொடி உறவை வேர்பிரித்து 
வேதனையின்றி  மெருதுவாய் கீறுகிறது 
குழைந்த மெல்லிய குரலொலி 

நொடிகளின் ஆயுள் நிகழ்வு 
உறவு  பேரம்பேசும் கீழ்பாலினம் 
வாக்குறுதி  அடியரையில்  மேல்பாலினம் 

 உறவு உயிர் ஓடிய 
வெட்டப்பட்ட தொப்புள் கொடியில்
பதியப்பட்டது முதல் விரிசல்

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/08/blog-post_14.html

கருத்துகள்

yarlpavanan's படம்

இறுக்கமாகப்


5

இறுக்கமாகப் புனைந்துள்ளீர்...
நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


syedali's படம்

மிக்க நன்றி தோழரே


மிக்க நன்றி தோழரே


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


Flower's படம்

அருமையாய் உள்ளது என்று


10

அருமையாய் உள்ளது என்று தெரிகிறது.......ஆனாலும் என் சிறு அறிவுக்கு நிறைய வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை... Clap Clap

syedali's படம்

கிறுக்கலின் பொருள் : திருமணம்


கிறுக்கலின் பொருள் :

திருமணம் முடிந்த புதிய தம்பதிகளின் ஒரு கூடலின் தருணம்
கூடலுக்கான முன்பு தலைவி கணவன் வீட்டில் தன் நிலையை தலைவனிடம் சொல்கிறாள்
தலைவனின் அம்மா அப்படி இப்படி விவரிக்கிறாள் இதனை தலை அசைத்து கேட்கிறான்
அற்ப காம போதையில் இருக்கும் தலைவன்

அந்த நிகழ்விற்கு பின் தாயுடனான அன்பில் சிறுது விரிசலை தலைவன் பதிவு செய்கிறான்
அதுதான் மனைவியின் தலையணை மந்திரம்

ஆண் ஒருவனிடம் எந்த தருணத்தில் தன் தேவைகளையும் நிலையையும் சொன்னால் கேட்பார்கள் என்று பெண்ணுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்

தலையணை மந்திரத்தில் சுதாரிக்கும் தலைவன்கள் ஒரு சிலரே

அந்த காலத்தில் இதற்கு ஒரு பெயர் சொல்வார்கள் அது (தலையணை மந்திரம் )
அதை நான் முனங்கல் மந்திரமாக மாற்றி எழுதி இருக்கிறேன்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....