syedali's படம்

 முந்நூறு

எழுத்துக் கிறுக்கல்கள் 
கிறுக்கியது என்  கரமாயினும் 
கிறுக்கச் சொன்னது 
சமூகம் 
இவர் 
இவர்கள் என் குருநாதர் 
அடையாள பொய் சொல்லுகையில் 
என்னோக்கி முகம் சுளிக்கும் 
சமூக ஆசான் 
படைப்பு 
இறைவனால் ஆக்கப்பட்டது 
மனிதர்களின்  தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது 
அறிவு 
கற்பவனுக்கும் 
கற்றுத் தேர்ந்தவனுக்கும் 
கற்றுக் கொடுப்பவன் 
இறைவன் 
சொல்படலம் 
மெய்யா பொய்மையா 
மனிதர்கள் தர்க்கிக்கலாம் 
இறைவன் கையில் தான் 
தீர்ப்பு 
கையளவு 
கற்றவனும் கற்காதவனும் 
வாழ்கிறார்கள் மடிகிறார்கள் 
கற்றதில் வாதம் கொள்பவர்கள் 
வாழப் பயப்படுகிறார்கள் 
வாழ்வின் 
ஒவ்வொரு அசைவுகளிலும் 
 இறைவன் பதிந்து செல்கிறான் 
அவன் இருப்பை

வாழ்க்கை 
இறைவன் எழுதிய கவிதை 
அதன் அதன் தருணங்களில் 
வாசிக்கபடுகிறது 
ஒரு 
கவிதை வாசிப்பின் முடிவில் 
மறுகவி பிறப்பெடுக்கும் 
இது இயற்கை கூற்று 
 ஒன்றை 
எழுதுகிறவன் எழுதும் முன் 
தன் சிந்தைத் திரையில் 
வாசிக்கிறான் 
சிந்தையில் 
எழுதும் வல்லமையுடைவன் 
இறைவன் மட்டுமே 
இது என்னதென்று மார்தட்டுவது 
மடமை 
எழுதத் 
தெரியாதவன் கையில் 
எழுதுகோல் கிட்டியதன் வினை 
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்  
கிறுக்கல்கள் 
-செய்தாலி

5
Your rating: None Average: 5 (1 vote)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/10/blog-post_29.html

கருத்துகள்

usavinitha's படம்

எழுத்துக்


5

எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்
வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

Clap Clap Clap