nksonline's படம்

மாறிவிடு இக்கணம் !
(மாற விரும்பும் - வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)

உலகம் திருந்த வேண்டும் என்று
பலவிதமாய் பேசுறோம் !
சுலபமாக்க வேண்டும் என்று
சுற்றி சுற்றி வருகிறோம் !
உலகில் உண்மை இல்லை என்று
ஊரைக் குத்தம் சொல்லுறோம் !
பாரைப் பார்த்து பாழ்மனதை
பாழாக்கிக் கொள்ளுறோம் !
உழைத்து உழைத்து
உண்மை பேசி
தன்னை திருத்திக் கொண்டாலே
தானாய் தரணி திருந்தி விடும்
தந்தை சொன்னார் என்னிடம் !
எந்தை சொல்லில் உள்ள உண்மை
விந்தை உலகில் விரித்திட்டேன் !
கந்தை கட்டிக் கொண்ட மாந்தர்
வெறும் காலில் நடந்து செல்லுறார் !
காரில் செல்லும் மக்களோ
குளிர் போதவில்லை என்கிறார் !
மாற்றம் வேண்டும் மண்ணிலே !
சமத்துவத்தை சொந்த மண்ணில்
சமைக்க வேண்டும் சாரமாய் !
அதற்கு
தன்னை திருத்தி கொள்ளவேண்டும்
தானாய் மாறும் தரணியும் !
தன்னை பெற்ற மனிதரை
தினமும் வணங்க வேண்டுமே!
குழந்தை தவறு செய்திட்டால்
குரைக்க வேண்டாம் வேகமாய் !
திருக்குறளை உவமை சொல்லி
திருத்தவேண்டும் தண்மையாய் !
பாய்க்கு மட்டும் மனையில்லை !
தாயாய் கண்டு வணங்கிடு !
தூய்மை வீட்டில் வேண்டுமே !
தினமும் குளிக்க வேண்டுமே !
குளித்த பின்னர் சிறிது நேரம்
கும்பிட்டு வணங்குவோம் !
தியானம் யோகம் பிராணாயாமம்
திரையில் காட்டும் பொருளல்ல !
மனதில் அமைதி சிறிது போதும்
பணத்தில் வருமோ பக்குவம் ?
பிறர் தன்னை திட்டினாலும்
கண்ணால் முறைத்து பார்க்காமல்
அமைதி தன்னை ஆழ்மனதில்
அழகாய் விதைக்க வேண்டுமே !
பழக தெரிய வில்லை இவர்க்கு,
பார்த்து இரக்கப்படுகிறார் என்று
பாதி உடல் சொன்னாலும்
பழக்கம் அதை மாற்றாமல்
இரக்கம் மனதில் வேண்டுமே !
தரையில் எவரும் பகையில்லை !
கரையில் கொள்கை வாராது !
இரையைத்தேடி தின்றாலும்
பிராணிகள் தன்னினத்தை தின்னாது !
மனிதன் மட்டும் மண்ணிலே
தன்னினத்தை தாழ்த்துறான் !
தனிமனிதன் தன்னை மாற்றி
கனிவை உள்ளம் கொண்டிட்டால்
இனிமையாக அமையும் வாழ்வு !
பனி மலையும் உருகிடும் !
துன்பம் அது வருகையில்
திரையில் காணும் படமென
மனதில் உறுதி கொண்டிடு !
இன்பம் இனிதாய் வருகையில்
சமமாய் பாவம் கொண்டிடு !
பேசி பேசி பொழுதை போக்கி
நாசமாக வேண்டுமோ ?
தினமும் சிறிது நேரத்தை
மெளனமாக கழித்திடு !
மெளனமாக இருக்கையில்
மனதை உள்ளே நோக்கிடு !
“எந்தன் இயல்பு என்னது ? பிறரை
சொந்தமாக நினைக்கிறேனா ?
இல்லை சுமை எனவே எண்ணமா ?
கஷ்டம் பிறர் படுகையில்
கடவுள் நினைப்பு வருகுதா இல்லை
கஷ்டம் வேண்டும் அவருக்கு
என்ன ஆட்டம் போட்டிட்டான் என
மனதில் எண்ணம் வருகுதா ?”
இப்படி
தினமும் சிறிதுநேரம் தன்னை
தன்னை பற்றி நினைத்திட்டால்
விண்ணைத் தாண்டி உலகத்தில்
திண்ணமாக உயரலாம் !
தன்னை திருத்திக் கொள்ளலாம் !
தானாய் உலகம் திருந்திடும் என
தந்தை சொன்ன பொருளதை
சிந்தையிலே கொள்ளுவேன் !
ஊழல் இந்த உலகிலே என
உரக்க குரல் கொடுக்கும் முன்
பரபரக்கும் என் மனதை
பார்த்து பார்த்து மாற்றுவேன் !
பத்து ரூபாய் நோட்டுக்காக
பொய்யை சொல்லும் பழக்கத்தை
போக்கி நின்று பழகுவேன் !
அக்கறையாய் அன்னை தந்தை
அனைவரையும் நோக்குவேன் !
நமக்கும் வயது ஆகிடும் !
நோய்கள் நம்மை முழுங்கிடும் !
அதனால்
வயது முதிர்ந்த வேர்களை
வணக்கம் சொல்லி வாழ்த்துவேன் !
பணமும் காசும் போய்விடும் !
பழக்கம் ஒன்றே நிலைத்திடும் !
தழதழக்க தாயிடம்
தினமும் கொஞ்சி பேசுவேன் !
தந்தை சொல்லும் கருத்தினை
தவறாமல் பழகுவேன் !
மனைவி அவளும் மனுஷிதான் !
மனதினிலே கொள்ளுவேன் !
பிள்ளை அவனை பேசி பேசி
பழக்கிடுவேன் நல்லதில் !
அத்தை பாட்டி அக்கா அண்ணா
உத்தமர்தான் அனைவரும்
உண்மை மனதில் கொள்ளுவேன் !
குறையாய் எதையும் கூறாமல்
குற்றம் என்ன என்னிடம்
சித்த நேரம் எண்ணுவேன் !
என்னை திருத்தி கொண்டிட்டால்
எந்தன் வீடு திருந்திடும் !
எந்தன் வீடு திருந்திட்டால்
பந்தசொந்தம் திருந்திடும் !
சொந்தமெலாம் திருந்திட்டால்
சூழ்ந்த ஊரும் திருந்திடும் !
சூழ்ந்த ஊரும் திருந்திட்டால்
வாழும் நாடு திருந்திடும் !
நாடும் உலகும் திருந்திட
நானும் இன்று திருந்துவேன் !
என் மனதை தினமும் நோக்கி
பக்குவமாய் மாற்றுவேன் !
எந்தன் மனது மாறினால்
எல்லாம் இங்கே மாறிடும் !
கல்லை எறிந்தால் குளத்திலே
களக்கம் வரும் அதனாலே
ஆழமிகுந்த என் மனதை
அமைதியதில் ஆழ்த்துவேன் !
பகைமை தன்னை போக்கியே
தகைமை தண்மை ஆக்குவேன் !
சிகையை அலங்கரிப்பதில்
சீராய் உலகம் ஆகுமோ?
சிந்தை தன்னை மாற்றினால்
விந்தை உலகு விளங்கிடும் !
எந்தை சொன்ன பொருளினை
இன்று உணர்ந்து கொண்டிட்டேன் !
உலகம் மாறி விட்டது !
உண்மை உணர்வில் வந்தது !
நாளை நன்றாய் விடிந்திடும் !
நம்பிக்கை வந்தது !
அம்பிகையைப் பணிந்திட்டேன் !
வம்பு தும்பு அகன்றது !
கம்பு கழியை சுற்றாமல்
கனிவாய் மனது ஆனது !
பணிவாய் நடந்து கொள்ளுவேன் !
மனமே உனக்கு சொல்லுறேன் !
மாறிவிடு இக்கணம் !
---

7.57143
Your rating: None Average: 7.6 (7 votes)

கருத்துகள்

vinoth's படம்

பதில் சொல்ல ஒன்றுமில்லை கை


7

பதில் சொல்ல ஒன்றுமில்லை
கை தட்டல் மட்டும் Clap Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

ஒரு கை ஓசையெழுப்பாது


10

ஒரு கை ஓசையெழுப்பாது இருப்பினும் சிந்தையில் நல்சிந்தைக் கொண்டவரே இன்னும் இதுபோல் பகுத்தறிவு மிக்க கவிதைகளை தாங்கள் பதிவு செய்ய வாழ்த்துகின்றோம் தமிழ் நண்பர்கள் சார்பாக! Clap

yarlpavanan's படம்

சிறந்த வழிகாட்டல்


10

சிறந்த வழிகாட்டல்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Thirumalaikumar's படம்

fine..


9

fine..
Clap