Skip to main content

மானிடம் அறியுமா?

URI: http://tamilnanbargal.com/node/42884
கருத்துகள்: 8Likes: 0306 views

மானிடம் அறியுமா?

rajudranjit's படம்

நாரணன் காக்க‌ பிரம்மன் விருத்தியென‌
சிவனோ விட்டொழிக்க‌ பாவம் தொலைந்திடவே
ஆகம சொல்லாம் பணமெனும் இறைவனின் செயலே

காரணம் கவனம் அதுவொரு பாரம்
படித்தவரெல்லாம் பணத்தின் அதிபதியாக‌
கோவணம் உடுத்தி உழைப்போர் ஏழ்மையில்

மாற்றம் வேண்டும் மனம் மாறுதல் அறிவுடனே
நாற்றம் என்றால் நாசிக்கு அருவெறுப்பாக
வாசனை என்பது மகிழ்வென‌ உள்ளம் பூரிக்க‌

அடித்தளம் உறுதி பணமெனும் வெகுமதியால்
ஆள்பவர் அறிவாலி தேர்ந்தெடுத்தோர் அறிவீலி
அதனால் குற்றம் யார் சொல்லி குறைவது கூறும்

அராய்ச்சி செய்ய‌ ஆயிரமாயிரம் கோடிகளுண்டு
வாடிய‌ வயிற்றுக்கு சோறென‌ கொடுப்பது யாரோ
இன்றைய‌ சந்நியாசி பதினாறும்பெற்ற‌ அகராதி

சுதந்திரம் சுற்ற‌ "சு" மட்டும் தெறித்தோட‌
தந்திரம் நிலைக்க‌ திறனில்லா மக்களால்
வந்தது வினையென‌ நாளைய‌ தூண்கள் ஆடிடவே

காற்றிருந்தால் உயிர்களெல்லாம் வாழும் பூமியில்
நீரிருந்தால் துணையென‌ உயிர்கள் அமையுமே
நிழலென‌ தாவரம் தகிக்கும் வெட்கை தணிந்திடவே

காரணம் உண்டே வாழ்வினில் வளம்பெற‌
பணமெனும் பாவம் செய்வதறிந்திட‌ மானிடத்திற்கு
மானிடம் அறியுமா மடமை வேற்றுமை ஒழித்திடவே

என்றும்:சுஷ்ருவா

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

படித்தவரெல்லாம் பணத்தின் அதிபதியாக‌
கோவணம் உடுத்தி உழைப்போர் ஏழ்மையில்

ஆராய்ச்சி செய்ய‌ ஆயிரமாயிரம் கோடிகளுண்டு

வாடிய‌ வயிற்றுக்கு சோறென‌ கொடுப்பது யாரோ

நல்ல வரிகள்..  வ்றுமையில் வாடுபவர்களை 
நினைத்துப் பார்க்க இங்கே யாருக்கும் நேரமில்லை
நல்ல மனமும் இல்லை. 

              

சுதந்திரம் சுற்ற‌ "சு" மட்டும் தெறித்தோட‌

தந்திரம் நிலைக்க‌ திறனில்லா மக்களால்

வந்தது வினையென‌ நாளைய‌ தூண்கள் ஆடிடவே

அடித்தளம் உறுதி பணமெனும் வெகுமதியால்

ஆள்பவர் அறிவாலி தேர்ந்தெடுத்தோர் அறிவீலி

              

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

நாளைய‌ சமுதாயம் சிறக்கின்ற‌ வழியென‌ எதை நமது வருங்கால‌ தலைமுறைகளுக்கு நம் மானிட சமுதயம் சொல்ல‌ காத்திருக்கின்றது? தவறான‌ வழிக்காட்டலால் வறுமையும், இயற்கை அழிப்புகளும் இன்னும் பலப்பல‌ செயல்களுக்கு வித்திட்டிருக்கும் மானுடச்சமுதாயம் எதை சொல்லிக் கொடுக்கப் போகின்றது? நன்றி நண்பரே!

vinoth's படம்

அராய்ச்சி செய்ய‌ ஆயிரமாயிரம் கோடிகளுண்டு
வாடிய‌ வயிற்றுக்கு சோறென‌ கொடுப்பது யாரோ

யோசிக்க வைத்த வரிகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...