கருத்துகள்
நண்பரே இந்த கவிதையை ஏற்கெனவே
நண்பரே
இந்த கவிதையை ஏற்கெனவே எங்கோ படித்ததாக தெரிகிறது.
பதிவுகளை இங்கு போடும் போது அதன் நிஜ எழுத்தாளர் பெயர் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதை கண்டிப்பாக இங்கே பதிய வேண்டுகிறோம். அதுவே மற்றவர்கள் கடினஉழைப்பில் உருவாகிய பதிவகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.
மேலும் முகவரிகளை தேவையில்லாமல் ஒருதடவைக்கு மேல் பதிதல் நம்மைப்பற்றிய வெறுப்பைத்தான் உருவாக்கும், அதை தவி்ர்க்க வேண்டுகிறோம்.
புரிதலுக்கு நன்றி
தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com

மன்னிக்கவும் நண்பரே, தங்கள்
மன்னிக்கவும் நண்பரே, தங்கள் படைப்புகளை மற்றவர்கள் இங்கே பதிந்திருந்தால் அதை தளத்திடம் தெரிவித்திருந்தால் அந்த நபரிடம் தெரிவித்து பதிவில் நிஜ எழுத்தாளர் பெயர் மற்றும் முகவரி போடவோ, அல்லது நிஜ எழுத்தாளருக்கு மறுப்பு இருந்தால் அப்பதிவை முற்றிலும் நீக்கவோ நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனக்குத்தெரிந்து அது மாதிரி எந்த குற்றச்சாட்டும் இதுவரை வந்ததாக நினைவில்லை.
அவ்வாறு குற்றச்சாட்டு இருப்பின் தயவு செய்து http://tamil2friends.com/contact பகுதியில் தெரிவிக்க வேண்டுகிறோம்.
அதே போல இனிமேல் தங்கள் படைப்புகளை பதியும் போது அதன் முகவரியை ஒரு தடவைக்கு மேலும் tags பகுதியிலும் போடவேண்டாம்.
கருத்துகள் பதியும் போது நிறையதடவை தங்கள் முகவரியை பதியும் போது அதை விளம்பரப்படுத்தும் நோக்கமாகவும் மேலும் ஸ்பேம் நபராகவும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதேபோல அங்கனம் செய்யும் போது தாங்கள் கூறிய கருத்து மதிப்பிழக்கவும் செய்கிறது.
மற்ற தளங்கள் போல் அல்லாமல், இத்தளத்திலேயே எவரும் அவரவர் தள முகவரியை இணையதளம் பகுதியில் பதியவும், அவரவர் தள முகவரியை தன் கையெழுத்தாக வைத்துக்கொள்ளவும் முழைமையாக அனுமதிக்கிறது. அதை விடுத்து அந்த சுதந்திரத்தில் ஸ்பேம் போல அதிக தடவை முகவரிகளை பதிவதால் தேவையில்லாத இடையூறுகளே எழுகிறது.
தளம் நல்லபடியாக செயல்பட ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
புரிதலுக்கு நன்றி
தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com





