syedali's படம்

எல்லா மனிதனின் 
அகச் சிறைகளில் உறங்குகிறது 
ஒரு மனுஷமிருகம்

 நச்சுக் கூர்மைகள் 
ஆழ்மனதை இரண்டாகக் கீறுகையில்
 சலனப்படுகிறது அகத்தில் உறங்கும்
மனுஷமிருகம் 
சில சீண்டல்களில் 
கூரமான செய்கைகளில் 
கோர நிகழ்வுகளில் விலங்கை உடைக்கிறது 
மனுஷ மிருகம் 
  
சுய வேதனையில் 
அசூர வேகத்தில் காயப்படுத்துகிறது 
விழியும் மதியும் இழந்த 
மனுஷமிருகம் 
காயப்பட்ட உறவுகள் 
கண்ணீர் உதிர்க்கையில் 
மௌனமாக அழுகிறது 
மனுஷ மிருகம்
உயிர்த்தெழும் 
மனுஷ மிருகத்தை 
சீண்டி காயப்படுத்தாதீர்கள் 
அன்புச் சிறைக்குள் பூட்டியிடுங்கள் 
மனுஷ மிருகத்தை 
சலனம் செய்யாதீர்கள் 
அதுவும் ஓர் உணர்வுதான் 
4
Your rating: None Average: 4 (1 vote)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/01/blog-post_12.html