கருத்துகள்
ஏற்புடையதல்ல தங்களின் கவிதை!
ஏற்புடையதல்ல தங்களின் கவிதை! தெய்வம்,கடவுள்,ஆண்டவன்,இறைவன்,பகவான்,சாமி இவை குறிப்பதெல்லாம் ஒன்றைத்தான்!
நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு, அது நாத்திகர் இல்லை என்பதிலே பிடிவாதமாக இருப்பார்!
ஆத்திகர் உண்டு என்பதில் பிடிவாதமாக இருப்பார்! ஆனால் இருவரும் நினைப்பது ஒரு விடயத்தைத் தான்!
மனிதன் தெய்வத்தை உருவாக்கியிருந்தாலும், தெய்வம் மனிதனை உருவாக்கியிருந்தாலும் அதன் பொருள் மனதின் அமைதிக்குத் தான்!
தெய்வத்தினின்று இறைவனையும்,கடவுளிடமிருந்து ஆண்டவனையும் மற்றும் பகவானிடமிருந்து சாமியையும் வேறுபடுத்தி பிரித்தது மனிதன் என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
அதனால் தெய்வத்தினின்று இறைவன் உயர்ந்தவரென்றோ,இறைவனிடமிருந்து தெய்வம் தாழ்ந்ததென்றோ கொள்ளுதல் அறியாமை!
குடும்பம் என்றால் உறவுகள் இல்லாமல் அமைவது இல்லை, இங்கே குடும்பம் என்பது மதமென கொள்ளுதல் வேண்டும், குடும்பத்தின் தலைவன் இறைவன்,தெய்வம் என கொண்டால் வீண் சிந்தனைகள் தான் உறவுகள்.
உறவுகள் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால் தான் தலைவன் சிறந்தவனாவான்!
இதைப் பற்றி பேசினால் இன்றல்ல இன்னும் பல வருடங்களல்ல பேசிக்கொண்டே போகலாம், எனவே தங்களின் கவிதை வரிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல!
syed ali
syed ali
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
தங்களது விளக்கம் கண்டு
தங்களது விளக்கம் கண்டு மகிழ்வுற்றேன்! இருப்பினும் அதில் கண்டுபிடிப்புகளை தெய்வமென்றும் கடைசியில் இறைவனிடம் மன்னிப்பு கேட்பது போலும் அந்த வரிகள் அமைந்து இருந்ததால் தான் நாம் விமர்சித்தோமே ஒழிய, மற்றபடி தங்களது மனம் நோகுவதற்காக நாம் தங்களை விமர்சிக்கவில்லை! நாம் தங்களது மனதை புன்படுத்திருந்தால் எமது தாழ்மையான வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்! இதுபோல் விமர்சிக்கக்கூடிய கவிதைகளை தாங்கள் எழுத வேண்டும், அதனால் நமது நட்பு பலப்படும்! நன்றி நண்பரே!
முதலில் படித்ததும் சரியாய்
முதலில் படித்ததும் சரியாய் புரியவில்லை.
விளக்கம் கண்டு தெளிவுட்ட்றேன்.
நல்லா இருக்கு.











