Skip to main content

மனதின் வாய்ஸ்

URI: http://tamilnanbargal.com/node/42254
கருத்துகள்: 4Likes: 0100 views

மனதின் வாய்ஸ்

cstephen03's படம்

சூரியன் மறையும் மாலை வேளை
நடு வானில் பறவைகளின் அணிவகுப்பு
இயல்பாக அரங்கேறியது வான் வெளியில் ஒரு டிராபிக்
வானுர்திகளும் கூட , ஒரு நிமிடம்
நின்று செல்கின்றன
என் விட்டு தென்னை மரங்கள்
காற்றின் ஆசைக்கு ஏற்ப தலை ஆட்டுகிறது
என் விட்டு துணி உலர்த்தும் கொடிகம்பம் கூட
அதன் ஸ்ருதிக்கு ஏற்ப ஆடுகிறது
நானும் காற்றின் வாசனையை நுகர்கிறேன்
என் மனதை ஈர்ப்பது போல்
பறவைகள் உலா வருகின்றன
நானும் அதனுடன் போட்டியிட்டு பறக்கிறேன்
என் சிறு வயது நினைவுகளை அசை போடுகிறேன்
வெள்ளை நாரைக் கொக்குகள் வானில் வலம்வரும் போது ,
உன் கைவிரல்களை நீட்டி கொண்டு ,
மனதிற்குள் வேண்டிக்கொண்டால்
அவை வெள்ளை பூக்களை கை விரல்களில் தூவும்
என்னுள் உள்ள குழந்தை மனதும் ...
நொடிப்பொழுதில் கை விரல்களை அதன் திசையை நோக்கி
நீட்டியது அன்னிச்சையாக என் மனதும் ,
அந்த நாரைக் கொக்குகள் என்னை கடந்து வானில் மறைந்தது
சில நொடிகளில் , என் கை விரல்களை விரித்து பார்த்தால்
ஒரு முழு நீள வாசகம்
" என் இந்த சோகம் உன்னுள் ..
உன் அன்பை பெற யாருக்கும் தகுதியில்லை
என்னை போல் , உன் மன சிறகை விரித்து பறந்து செல்
உன் அன்பை பிறருக்கு வெளிபடுத்து
அவர்கள் உன் அன்பை பெற விரும்பினால் "
என் மனதோ , விடுதலையான இந்தியாவை போல்
சந்தோசம் அடைந்தது ...
இது வரை இல்லாத ஒன்றை தேடி கொண்டு இருந்தேன்
இனிமேல் ... என் வாழ்கை பயணத்தை சுகமாக
தொடங்க போகிறேன் ...
என் சிறை பட்ட மனதின் வாய்ஸ்...

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

" width="44" />  " width="44" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

vinoth's படம்

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...