உன்னிடம் பேசும்போது சென்ற
நேரத்தின் வேகம் தெரியவில்லை
நேற்று வரை!
இன்றோ நேரமோ செல்லவில்லை
உன்னிடம் பேசாததால்!
இந்த இரண்டு மாதமும்,
இரண்டு நொடிகளாய் போனதடா! .
இன்று ஒரு நாள் சென்றதோ...
இரண்டு யுகமாய் தெரியுதடா!
நினைத்து கூட பார்க்கமுடியவில்லை .......
உன்னிடம் பேசாமல் இருப்பதற்கு!
மனத்தால் மட்டும் அல்ல, மரணத்தில் கூட .......
பேசும் என் மனம்...
கருத்துகள்
என் மனமும் பேசுகிறது இதை
என் மனமும் பேசுகிறது
இதை படிக்கும் அத்தனை பேர் மனமும் நிச்சயம் உடனே பேச துடிக்கும் தன் அன்பானவரிடத்தில்... அத்தனை உயிர்ப்பான வரிகள்...
வாழ்த்துக்கள் தீபா... தீபம் இன்னும் ஒளிரட்டும்...
நினைத்து கூட
நினைத்து கூட பார்க்கமுடியவில்லை .......
உன்னிடம் பேசாமல் இருப்பதற்கு!
மனத்தால் மட்டும் அல்ல, மரணத்தில் கூட .......
------------ அருமையான வரிகள் --------------------

காதல் நேரத்தில் ஒவ்வொரு துளி
காதல் நேரத்தில் ஒவ்வொரு துளி நேரமும் நோயாலியின் நரம்பில் இறங்கும் இரத்தத்துளிகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
குறைந்த வரிகளில் நிறைந்த
குறைந்த வரிகளில்
நிறைந்த தகவல்...
காதல், நேரம் ஆகிய
இரண்டின் ஒப்பீடு
நல்லாயிருக்கு! 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
காதல் மறக்க வைக்கும்
காதல் மறக்க வைக்கும் எல்லாவற்றையும் காதலனோ காதலியோ தாம் இருவரைத் தவிர, காதல் மிகவும் கவனமாகக் கையாளக் கூடிய ஒன்று ஒரு பக்கம் அது ஒரு நீர்குமிழி, ஒரு பக்கம் அது அசைக்க முடியாத மலை எதுவாக இருப்பினும் சிதறாதக் கவனமும் பதறாத மனமும் காதலை வாழ வைக்கும், வெற்றியெனில் துள்ளாமலும் தோல்வியெனில் துவலாமலும் அதை கையாளக் கூடிய துணிவும் வேண்டும், கற்பனை எனில் நன்று! உண்மை எனில் கவனம்! கவனம்! கவனம்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
வணக்கம் தோழி, மிகவும்
வணக்கம் தோழி,
மிகவும் அருமையான காதல் கவிதை......
"நினைத்து கூட பார்க்கமுடியவில்லை .......
உன்னிடம் பேசாமல் இருப்பதற்கு!
மனத்தால் மட்டும் அல்ல, மரணத்தில் கூட .......
பேசும் என் மனம்..."
தங்களின் காதலின் ஆழத்தையே காட்டுகின்றது......

மரணத்தில் கூட ....... பேசும்
மரணத்தில் கூட .......
பேசும் என் மனம்...
எனும் வரிகள் நன்றாக இருக்கின்றது.......
மனத்தால் மட்டும் அல்ல,
மனத்தால் மட்டும் அல்ல, மரணத்தில் கூட .......
பேசும் என் மனம்... 













