aro...'s படம்

"பெண்"மாலை

அதோ...........
அந்த சூரிய பெண்
காரிருள் கணவனை
தழுவ போவதை எண்ணி
வெட்க பூ பூத்துவிட்டால்;
வான வனாந்திரமும்
சிவப்பை உடுத்தி
உவகை கூட்டியது;

நாள் முழுவதும் உலாவியவள்
நாயகனை குலாவுவதை எண்ணி
வெட்க பூ பூத்த நேரத்தில்
தென்றலது வடை காற்றாய்
அவள் ஆடை தொட‌
அணைக்க முடியா அத்தீ
அவனை அணைக்க‌ வளைந்ததால்
குறுகி அத்தீ "அந்தீ"யானதோ.......?!!

அவளின் அணைப்பில்; ஆனந்தத்தில்
மயக்கத்தில் மதிமயங்கியிருந்த அவன்
வளைந்த அவள்கரத்தின்
மஞ்சள் நிறம் கண்டு
"மாலை"என்றானோ........!!?

காதல் போதையில்
காரிருள் மார்பில் அவள் சாய்ந்தை கண்டு
என் முப்பாட்டன் கிறுக்கன்,
அவள் சாயும் காலம்
ஆதலால் அதை
சாயுங்காலம் என்றழைத்தனோ............!!?

அந்தியில் அந்த வானத்தில்
அவள் விட்டுசென்ற‌
வெட்க பூக்களை
கன்னத்தில் சூடித்தான்
மங்கையரும் காதலரை
கவிழ்த்து விட்டனரோ.......?!!

எது எப்படியிருந்தால் என்ன
என் முன்னவன் ஒருவன்
"பொன்மாலையை எழுதா
எழுதுகோலெல்லாம்
முடமாகி போகட்டும்"
என்றளித்த சாபத்தில்
என் கோல் தப்பியது
எனக்கது போதும்..... Big smile

7.71429
Your rating: None Average: 7.7 (7 votes)

கருத்துகள்

anuridha's படம்

நன்று...மிகவும்


10

நன்று...மிகவும் நன்று....ரசித்து படித்தேன்!...god...no words to explain...excellent man ..keep it up! keep doing...

yarlpavanan's படம்

எல்லாப் பாவலரும் நிலவைப்


8

எல்லாப் பாவலரும்
நிலவைப் பெண்ணாக உவமிக்க
தான் மட்டும் கதிரவனை(சூரியனை)
பெண்ணாக உவமித்தது ஏனோ?


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


aro...'s படம்

மஞ்சள் பூசி குளிப்பதும்


மஞ்சள் பூசி குளிப்பதும் வெட்கத்தில் சிவப்பதும் பெண்ணின் இயல்புகள் அல்லவா...? மாலையி சூரியனும் அதைதானே செய்கிறது; மஞ்சள் பூசி சிவந்து கடலில் குளிக்கிறாள் அல்லவா........? அதனால் தான் பெண்ணுக்கு உவமித்தேன்..


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


Ponvannan's படம்

நிலவைப் போல் இருந்தவள்


8

நிலவைப் போல் இருந்தவள் கதிரவனைப் போல் இன்று மாறிவிட்டாளோ?
மங்கையரும் காதலரை
கவிழ்த்து விட்டனரோ.......? என்ற வரிகள் எங்கே யார் எப்படி கவிழப் போகிறாரோ என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நல்ல கவிதை. வாழ்த்துகள்.

joshi2010's படம்

நல்ல அருமையான


7

நல்ல அருமையான சிந்தனை........
"அவளின் அணைப்பில்; ஆனந்தத்தில்
மயக்கத்தில் மதிமயங்கியிருந்த அவன்
வளைந்த அவள்கரத்தின்
மஞ்சள் நிறம் கண்டு
"மாலை"என்றானோ."

வரிகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே..... Clap Clap Clap Clap :clஅப்:


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

கவிஞனுக்கழகு க‌ற்பனை


9

கவிஞனுக்கழகு க‌ற்பனை திறன்
உமது கற்பனை இயற்கையை
மாலை போட்டு மணந்துள்ளதோ

ஆதவன் ஞாயிறு ஆண்பாலென‌விருக்க‌
பரிதி உமக்கு பெண்பாலாகிப் போனானோ
யாரும் கருதிப் பார்த்ததில்லை சூரியன் பெண்ணென‌

துணிந்து பெண்ணென சூரியனானானே
சூடது குளிர்ந்து உம்மை மட்டும் குளிர்விக்க‌
கவியின் எழுதுகோலுக்கு அஞ்சியோ

அண்டம் கிடுகிடுக்க வானம் இடிமுழங்க‌
கொடுங்காற்று வீசி கண்டமது இடமாறினாலும்
கவிஞனுக்கு ஏது பயம் என‌வுணர்த்தியக் கவியே

முஷ்டிமடக்கி இருப்பது அப்படத்தில் மட்டுமல்ல‌
உமது உள்ளத்திலும் அதுபோலே உண்டென‌
அவனைப் பெண்ணென சொல்லி அலியாக்கியக் கவியே

சூரியன் மேலுமக்கு கோபமென்ன‌
அவன் செல்லும் இராசிப் பாதை பொருத்து
சுட்டும் சுனங்கியும் அவன் செல்கின்றான்

கவியே உமது கற்பனைக்கு பாராட்டுக்கள்
சிந்தனையில் மாற்றம் கொண்டதற்கு பாராட்டுக்கள்
பாவமவன் ஆதவன் அவனுக்கு அவமானம் வேண்டாமே!

என்றும்: சுஷ்ருவா

aro...'s படம்

கிட்டே போனால் குளிர்காயும்


கிட்டே போனால் குளிர்காயும் பதத்திலும் எட்டே இருந்தால் எரிகும் தண்மையும் பெண்மைக்கு உண்டென வள்ளுவனே வியந்த போது சுடும் தன்மை உள்ள சூரியனை பெண்ணாக பாவித்தது தவறோ.?;

இங்கே கதிரவ பெண்ணென நான் சொல்லவில்லை சூரிய பெண்னென தானே சொல்லியுள்ளேன் சூரியா என்ற பெயரில் தாங்கள் பெண்களை கண்டதில்லையோ...?

சூரியனை இதுவரை எல்லேரும் சுடும் தன்மையை கொண்டும் சுற்றிவரும் காரணத்தாலும் ஆண்பாலாக அழைத்தனர்

ஆனால் நான் எத்தனையோ ஆண்களை தன்பின்னால் அலையவிடும் மங்கையை போல தன்னை சுற்றி வர கிரகங்களை கொண்டுள்ள சூரியனை பெண்ணாக பாவித்ததில் தவறு உள்ளதோ..?

இரவில் ஒளிகொடுக்கும் நிலவை பெண்ணென்றால் பிரகாசமான முகம்கொண்ட சூரியனை தேவதைக்கு ஒப்பிடலாம் அல்லவா....?

வாழ்த்துகளுக்கு நடுவில் வமர்சித்த உங்களுக்கு என் அளவிட இயலாத அன்புள்ள நன்றிகள் heart


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


vinoth's படம்

வழக்கம் போல கவித்துவமும்


7

வழக்கம் போல கவித்துவமும் காதலும் உவமையும் இழையோடும் கவிதை.

Clap Clap Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...