பெண்ணே நீ !
==============
மலருக்கும் நிலவுக்கும்
பேசப்படும் உவமைகளில்...
புகழப்படும் வார்த்தைகளில்...
புழங்காகிதம் கொண்டதால்
மழுங்கடிக்கப்படுகிறது
உன் அறிவும் புகழும் !
உன் அழகை
வர்ணிக்கும்
வார்த்தைகளில்
தோண்டப்படுகிறது
உனக்கு மரணக்குழி!
பெற்ற பிள்ளை
பித்துப் பாசத்தில்
உரிமைகள் பறிகொடுத்தலில்
கட்டப்படுகிறது
முதியோர் இல்லங்கள் !
அன்பு கருணை
போர்வை போர்த்திய
அரசியலால்
கல்லறை கட்டப்பட்டது
வேலு நாச்சியாருக்கும்
ஜாண்சி ராணி்க்கும்
பெண்ணே !
ஆணாதிக்க வாதத்தால்
ஆதரவு கரம் பேசி
பறிக்கப்படுகிறது
உன் பெண்மை !
நாகரீக முற்போக்கு பேசி
மேனாட்டு அரைகுறை
மோகத்தி்ல் வீழ்த்தப்பட்டு
இரசிக்கப்படுகிறது
உன் பெண்மை !
"வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார் ஒரு முறை"
வீர வசனத்தில்
உன் இளமை
உற்சாக உணர்ச்சியேற்றி
தகர்க்கப்படுகிறது
உன் வாழ்க்கை !
பெண் மீது கொண்ட
பொறாமையில் உனை
சொந்தமாக்கத் துடித்து
சுத்திவரும் ஆண்மை
காதல் சொல்லி
வீழ்த்தப்படுகிறது
உன் பெண்மை !
ஒருமுறை வீழ்ந்தால்
வீழ்ந்தே கிடப்பதால்
தெரிந்தே நசுக்கப்படுகிறது
பெண்மை !
வீழ்ந்தே கிடப்பது
அழகல்ல உனக்கு
பெண் புலியாக எழுந்திரு !
பெண்மையை இழந்து
ஆணாகக் கேட்கும்
சம உரிமை மூடத்தை
தூக்கி எறி !
உலகம் சம படைப்பெனச்
சொல்லி அடி !
"பெண் போகப் பொருளா?"
கேட்கும் முன்
போதையில் போகமாகும்
பெண்களை ஒழி !
பெண்மை மேன்படும் !
ஆணுக்கு நிகர் கேடுகளை
செய்வதில் நிறுவப்படுவதில்லை
"ஆணுக்கு பெண் சளைத்தவரா?"
ஆணவப் பேச்சு !
ஆணும் செய்யாத சாதனைகளை
சாதிப்பதில் இருக்கிறது
பெண்மையின் உன்னதம் !
சாதனை தொட்டுவிடும்
தூரம் தான் !
சோகத்தை சொர்க்கம் ஆக்க
சோதனையில் சோரம் போகாது
சீறி எழுந்திரு
சாதனைப் பெண்ணே !
சீறி எழுந்திரு !
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth
கருத்துகள்
நல்லா இருக்கு
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...!!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நல்ல கவிதை. யாரோ
நல்ல கவிதை.
யாரோ சொன்னாங்க....
பெண் தான் சுதந்திரம் அடைவதாய் நினைத்துக் கொண்டு தனக்குறிய அடையாளங்களை இழக்கிறாள்.
சந்துரு
அருமை நன்பா
அருமை நன்பா
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்








