நினைக்கிற நினைப்பில
கிடக்கிற பழசுகள்
உள்ளத்தைப் புண்படுத்துமே தவிர
இனிதாக எதனையும்
உன்னில் ஏற்படுத்தாதே!
படிக்கிற படிப்பில
பார்க்கின்ற பார்வையிலே
நுகருகிற அறிவில
புரிகிற உணர்வில
உன்னிலே தெளிவு வந்திடுமே!
பின்விளைவைக் கற்றிடு
பக்கவிளைவைக் அறிந்திடு
நேர்விளைவில் கண்டிருப்பாய்
பகுத்தறிவு இதுதானென்று!
உலகமே உனக்கொரு தூசு
பின்னைப் பொன்னெனப் பகுத்தறி
முன்னைக் கொஞ்சமாயினும் மறந்திடு
இன்றே தென்படும் உனது வெற்றி!
(6 votes)
கருத்துகள்
சிறப்பான நேர்மறை கவிதை.....
Submitted by sentamildasan on வியாழன், 25/08/2011 - 2:00pm.
சிறப்பான நேர்மறை கவிதை.....












