ஏனடா இறைவா,
கைவிரல்களை
ஓடித்தாய்,
உடலில் பாய்ந்த
உதிரம் குடித்தாய்,
நட்பின்
பவித்திரம் சிதைத்தாய்,
மலரை
தீயிட்டு வதைத்தாய்,
செடிமேல்
அடைமழை பெய்தாய்,
அவள் மனம்
சுமந்த
கனவுகள் கோடி,
முடித்தாயே நீ
முகாரி பாடி,
உலகத்தில்
அவளோர் புள்ளி
ஏன் வைத்தாய்
அவளுக்கு கொள்ளி,
பிரித்தாயே என்
இரண்டாம் தாயை,
இனி என்
தோள்சாய நட்பேது,
விழிநீர்
துடைக்க விரலேது,
உயிர் தோழியே,
நட்பின்
கலியுக இலக்கணமே
இறக்க துடிக்கிறேன்
நானும் இக்கணமே,
காதலனை பிரிந்தாலும்
சுகித்திருப்பேன்,
தோழியை பிரித்தாய்
எப்படி சகித்திருப்பேன்,
என் துயர்
துடைப்பார் யாரடா,
இனி என்
வாழ்வே வீனடா,
மண்டியிடுகிறேன் இறைவா
நண்பர்களை பிரிக்காதே..............

கருத்துகள்
Really Super ... காதலனை
Really Super ...
காதலனை பிரிந்தாலும்
சுகித்திருப்பேன்,
தோழியை பிரித்தாய்
எப்படி சகித்திருப்பேன்,
என் துயர்
துடைப்பார் யாரடா,
இனி என்
வாழ்வே வீனடா,
மண்டியிடுகிறேன் இறைவா
நண்பர்களை பிரிக்காதே......
அருைம
அருைம
என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்
நியாயமான கோபம் நல்ல கவிதை
நியாயமான கோபம்
நல்ல கவிதை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










