உங்கண்ணன் கிட்டேயும்
அப்பன் கிட்டேயும் அற வாங்கி
ஒந்தங்கச்சி மொறச்சி
உங்கம்மா ஏசி...
எங்கப்பன் அடிக்க
அண்ணன் தடுக்க
அம்மா அழ...
சந்தித் தெரு சடேறியும்
மேலத் தெரு வேலப்பனும்
வந்து பஞ்சாயத்து பண்ணி...
நாத்து பரிசுகளுக்கும்
நடகுக்காரிகளுக்கும்
தலைப்புச் சேதியாகி...
பட்டுக்கோட்டையில் இருந்து
வைரமுத்து வரை பாடல்களில்
கவிதை தொகுத்து...
மொழங்கையில் 'சிகரெட்'
பொட்டுகள் இட்டு
வளரா தாடையைத்
தடவி...
ஒரு வாரம் வீட்டுல
உண்ணாவிரதம் கெடந்து...
இப்படித்தான்
படாத பாடுபட்டு
உன்னை மறந்ததா..!
நெனச்சிகிட்டு
இருக்காங்க பாவம்..!
ஊரு சனம்....
நன்றி: திரு.பெ.மணிகண்டன்.
கருத்துகள்
வரிகளில் கிராமத்து மண்வாசனை
வரிகளில் கிராமத்து மண்வாசனை
பகிவிர்க்கு நன்றி தோழரே ....
என்றும் கவியுடன்
அ.செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
இதெல்லாம் இல்லாம ஈசியா
இதெல்லாம் இல்லாம ஈசியா மறந்திட்டாருன்னு சொல்லிருக்காரு.. சரியா..
1 இருந்தா மறக்க கஷ்டம்,
2, 3 இருந்தா ஒன்று போனாலும் இன்னொன்று இருக்கிறதே.. : )
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
என்கி்ட்டேயா சொல்றீங்க???
என்கி்ட்டேயா சொல்றீங்க???
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பலா அவங்க புரியலைன்னு
பலா அவங்க புரியலைன்னு சொன்னாங்களே, அதான் புரியவைக்கலாம்னு.. : ).
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.













